This page contains 'Unicode' Tamil contents. Make sure to set your browser encoding to 'Unicode'. Click here to know how to enable Unicode in your browser.

கனிகாஸ் - நிஜமல்ல கதை


இனிவரும் நாட்களில் என் எண்ணத்தில் வரும் கற்பனை சம்பவங்களை அவ்வப்போது இந்த வலைப்பக்கங்களில் உங்களோடு பகிர்ந்து கொள்ளப் போகிறேன்

தமிழில் நான் சராசரிக்கும் மிக மிகக் கீழ். எனவே எழுத்துப் பிழை/பொருட்பிழை இருப்பின் மன்னிக்க (சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்கிறேன்)

இதுவரை...


கதைச்சுருக்கத்திற்கு, மேலே சொடுக்கவும் (முந்தைய பகுதிகளை விரிவாக படிக்க விரும்புபவர்கள் தேதி வாரியாக கீழிருந்து மேலாகப் படிக்கவும்.)

என்னமோ நடக்குது

"என்ன சொல்ற" - ஸ்பந்தனா

"ஆமா, யோசிச்சு பாரு. படிச்சி முடிச்சாச்சி, இப்ப நடிப்பு கத்துக்கிட்டப்றம் சிறந்த நடிகையா ஆகனும்னா அது தமிழ் சினிமால முடியாது, ஏன்னா இங்க ஹீரோவுக்கு இருக்கிற அளவு ஹீரோயினுக்கு முக்கியத்துவமில்ல" - கதிர்

"சரி ஓ.கே, காசு பணம், புகழ் எல்லாம் சேர்த்தாச்சின்னு வச்சிக்க, அதுக்கப்றம் ? என்னன்னு எப்பவாவது யோசிச்சி பாத்துருக்கியா. சூட்டிங் முடிஞ்சி வீடு வந்து சேரும்போது நம்ம புரிஞ்சிக்கிற, நமக்காக கேர் எடுத்துக்கிற ஒருத்தர் இருக்கனும்" - கதிர்

"" - ஸ்பந்தனா

"இப்ப உடனே கூட கல்யாணம் பண்றதப்பத்தி யோசிக்க வேணாம், நாம ரெண்டு பேரும் கரியர்ல சாதிக்க வேண்டியதெல்லாம் சாதிச்சப்றம் கல்யாணம் பண்ணிக்கலாம், நீ சரின்னு சொன்னா நான் வெயிட் பண்றேன்" - கதிர்

"" - ஸ்பந்தனா

"அது மட்டுமில்ல, இன் கேஸ் நம்ம கரியர் நாம நெனச்சபடி அமையலன்னாகூட, எனனோட பூர்வீக சொத்துக்களை வைத்து கோயமுத்தூர்ல நல்ல வாழ்க்கைய அமைச்சிக்கலாம். என்ன சொல்ற" - கதிர்

"திடீர்னு கேட்டா என்ன சொல்றதுன்னு தெரியல கதிர்" - ஸ்பந்தனா

"டேக் யுவர் ஓன் டைம் ஸ்பந்தனா, ஒரு வாரம் கழிச்சி உன் முடிவை சொல்லு" - கதிர்

நீண்ட மௌனத்திற்குப் பின் இருவரும் கலைந்து செல்கின்றனர்.

காந்தி மண்டபத்தில் மறுநாள் மாலை 7 மணி.

வழக்கம் போல ஏன் யாரும் வரவில்லை கதிர் ஏதோ யோசனையில் இருந்தபோது நித்யா வந்து சேர்ந்தாள்

"வாங்க அம்மனி, இப்ப தான் மணி 5 ஆகுதுங்களா ?" - கதிர்

"சாரி கதிர், அடையார்ல பர்சேஸ் முடிச்சி வர்றதுக்கு கொஞ்சம் லேட் ஆயிடிச்சி. அது சரி, அவங்க ரெண்டு பேரும் எங்க"

"இன்னும் வரலை." - கதிர்

முப்பது நிமிஷ நேரம் மௌனத்தில் கரைந்தது. தூரத்தில் பிரச்சனை அவர்களுக்காக ஒரு குடிகார போலீஸ் ரூபத்தில் வந்தது.

"ஏய், இன்னாடா, எங்கிந்து தள்ளிக்கினு வந்திருக்க"

"சார், கொஞ்சம் மரியாதையா பேசுங்க. வீ ஆர் பில்ம் இன்ஸ்டியூட் ஸ்டூடெண்ட்ஸ்" - கதிர்

"அப்டியா கன்ணுகளா, ஐ.டி கார்டு எங்க ?"

இவர்கள் இருவரும் ஐ.டி கார்டு காண்பிக்க, அதை பிடுங்கி வைத்துக்கொண்டு "நூறு ரூபா குடுத்துட்டு வாங்கிக்க" என்றான் அந்த குடிகாரன்.

ஒரு வழியாக கதிர் தன் தந்தையின் நன்பரான உயர் போலீஸ் அதிகாரிக்கு போன் செய்து அந்த குடிகாரனிடமிருந்து ஐ.டி கார்டை வாங்குவதற்குள் போதுமென்றானது.

மறுநாள் முதல் அடையாரில் இருக்கும் ஒரு நல்ல ஓட்டலின் ஏ.சி செய்யப்பட்ட உணவருந்தும் அறையில் வாரம் ஒரு முறை மட்டும் சந்திக்கலாம் என்று சொன்ன நித்யா. இதை ஈஸ்வருக்கும் ஸ்பந்தனாவுக்கும் தானே சொல்லிவிடுவதாகச் சொன்னாள்.

அடுத்த வாரமும் அதன் பின்னும் ஏனோ ஈஸ்வரும் ஸ்பந்தனாவும் இவர்களோடு அரட்டை கச்சேரிக்கு வரவில்லை. கதிர் இதுபற்றி நித்யாவைக் கேட்டப்போது இருவரிடமும் ஓட்டலில் சந்திக்கலாம் என்று சொன்னதாகவும் அவர்கள் அதற்கு பதில் சொல்லவில்லை என்றும் சொன்னாள். கல்லூரியிலும் நித்யாவையோ கதிரையோ எப்பொழுதாவது பார்க்க நேர்ந்தால் பார்க்காததுபோல முகத்தை திருப்பிக்கொண்டு சென்றனர் ஈஸ்வரும் ஸ்பந்தனாவும்.

ஒரு நாள் அடையாரில் ஓட்டலில் கதிரும் நித்யாவும் ஆர்டர் செய்துவிட்டு பேசிக்கொண்டிருந்தபோது பக்கத்து சீட்டிலிருந்த ஒல்லியான உயரமான ஒருவன் நேராக இவர்கள் சீட்டுக்கு வந்து தான் அணிந்திருந்த மெல்லிய கண்ணாடி வழியாக கதிரை முறைத்துப் பார்த்தான்.

"டேய்! நீ விவிதபாரதி தானே, என்னடா இந்தப்பக்கம்" என்றான் கதிர் ஆச்சர்யத்தில் கண்கள் விரிய. கதிரின் கல்லூரிக்கால நன்பன் விஸ்வபாரதி, கதிர் அவனை விஸ்வா என்று அழைப்பான். சிலசமயம் வம்புக்கிழுக்க நினைத்தால் விவிதபாரதி என்பான்

முள்ளும் மலரும்

மௌனமாய் அவனை பார்த்தாள்.

"சேச்சே! இருக்காது. ஏன்னா என்னப்பத்தி உனக்கு ஒன்னும் தெரியாது" - கதிர்

மீண்டும் மௌனம். - நித்யா

"சரி லெட்ஸ் அனலைஸ். நான் பழகும் விதம் உனக்கு பிடிச்சிருக்கும் அல்லது எனது இயல்பு பிடிச்சிருக்கும். இல்லன்னா என் உருவம் உன் குடும்பத்தில் உனக்கு பிடிச்ச ஒருத்தர் போல இருக்கலாம். வேற ஏதாவது கூட இருக்கலாம்." - கதிர்

"என்னன்னு சொல்லத் தெரியலை. ஆனா இது நட்பு மட்டும் இல்லைன்னு தெரியும்" - நித்யா

"யோசிச்சு பாரு நித்தி. நம்ம ரெண்டு பெரும் வாழ்வில் பெரிய நோக்கங்களை நோக்கி பொயிக்கிட்டிருக்கோம். உயரத்தில் இருக்கும்போது இது போல பல நேரங்களில் நாம் தனியாக முடிவெடுக்க வேண்டி வரும்" - கதிர்

"யோசிக்க முடியலை" - நித்யா

"ஓ.கே நான் சொல்றேன். ப்ரெண்ட்ஷிப் தாண்டி நாம ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் கேர் பண்ணிக்றோம். பட் ஸ்டில், இதை காதல், கல்யாணம், செக்ஸ், குழந்தை, சராசரி வாழ்க்கை - இப்படி வளர்க்க வேண்டாம். ஏன்னா இதுல ஒரு தோல்வி வந்தா அதோட பாதிப்பு நம்ப கரியர்ல அடி வாங்கிடும்" - கதிர்

"அதே சமயம் நாம இதே பொல ப்ரெண்ட்ஷிப் மட்டும் கன்ட்ரக்டிவா வளர்த்தா ரெண்டு பேருக்குமே நல்லது" - கதிர்

"இப்ப சொல்லு. நாம ரெண்டு பேரும் லவ் பண்ணலை இல்லையா ?" - கதிர்

"உம்" அரை மனதாய் தலையசைத்தாள் நித்யா

பஸ் வடபழனியில் நின்றது.

"ஓ.கே நித்தி. நாளை பார்க்கலாம்" - கதிர்

மறுநாள்-

மாலை அரட்டைக்கு நித்யா, ஸ்பந்தனா இருவருமே வரவில்லை.

"என்னடா கதிர், இன்னைக்கு இவங்க ரெண்டு பெருமே காணுமே" - ஈஸ்வர்

"தெரியலடா" - கதிர்

"உன் கிட்ட முக்கியமான விஷயம் சொல்லனும்" - ஈஸ்வர்

"என்ன?" - கதிர்

"நான் ஸ்பந்தனாவை லவ் பண்றேன். அவள்ட்ட நேத்து சொல்லிட்டேன்" - ஈஸ்வர்

"அப்படியா. அவ என்ன சொன்னா?" - கதிர்

"ஒரு வாரம் யோசிச்சி பதில் சொல்றேன்னா" - ஈஸ்வர்

"கொஞ்ச நாள் பழக்கத்தில எப்டிரா உங்களுக்கெல்லாம் லவ் வருது" நக்கலான புன்னகையோடு
சொன்னான் கதிர்

"சரி நான் கிளம்பறேன். இன்னைக்கு எங்க மாமா ஊர்ல இருந்து வந்திருக்காங்க" என்றபடி கிளம்பினான் ஈஸ்வர்

சிறிது நேரம் கதிர் ஏதோ யோசனையிலிருந்தபோது ஸ்பந்தனா வந்தாள்.

"என்ன கதிர் எங்க போனாங்க ஈஸ்வரும் நித்தியும் ?" - ஸ்பந்தனா

"நித்தி இன்னிக்கு காணோம், ஈஸ்வர் இப்பதான் கிளம்பினான்" - கதிர்

"அப்றம், வேற என்ன விஷயம் ?" - ஸ்பந்தனா

"வேற என்ன, வீட்ல எனக்கு பொண்ணு பார்க்கறங்க. உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு என்னை கல்யாணம் பண்ணிக்கிறயா?" - கதிர்

"விளையாடாதே கதிர்" - ஸ்பந்தனா

"இல்லை நான் ரொம்ப சீரியஸா யோசிச்சிதான் சொல்றேன். என்னை கல்யாணம் பண்ணிக்கிறயா?" மறுபடி கேட்டான் கதிர்

வசந்தம்

மாலை சந்திப்பில் ஒரு நாள்.

"என்ன இன்னும் நித்யாவைக் காணோம் ?" - ஸ்பந்தனா

"காந்தி மண்டபம் போனால் இருப்பாள்" - ஈஸ்வர்

"என்னடா சொல்ற" - கதிர்

"ஆமா, எத்தனை நாள் காலேஜ் மரத்தடியில அரட்டை அடிப்பது, ஒரு மாறுதலுக்காக நாளை முதல் காந்தி மண்டபத்தில் சந்திக்கலாம்னு அவள் கிட்ட சொன்னேன். லூசு இன்னிக்கே பொயிருச்சி பொல இருக்கு" - ஈஸ்வர்

"சே! பாவம்டா. நீ செஞ்சது தப்பு, அவளை எதுக்கு லூசுன்னு திட்ற" - கதிர்

"பாருடா! மாப்ளைக்கு கோவத்த, டேய் உண்மையச் சொல்லு உனக்கு அவள் மேல ஒரு சாப்ட் கார்னர் தானே" - ஈஸ்வர்

"சேச்சே! அப்படியெல்லாம் இல்லடா, எனக்கு இந்த காதல்லல்லாம் நம்பிக்கை இல்லை ஆண்-பெண் இடையே வெறும் நட்பு மட்டும் கூட சாத்தியம் நம்பறவன் நான்" - கதிர்

"உனக்கு எப்படியோ தெரியாது, ஆனா நித்யாக்கு உன் மேல ஒரு நட்பு தாண்டிய ஈர்ப்பு உண்டு. அன்னிக்கு மர்பிங் ஷ்பெசல் க்லாஸ்ல 'ஜீன்ஸ்' படத்தை எடிட் பண்ணும்போது ஐஸ்வர்யா ராய் அழகை நீ வர்னிச்சப்ப அவள் முகத்தை பார்க்கனுமே. பொதுவாய் ஒரு பெண்ணுக்கு பிடிச்சவன் இன்னொரு பெண்ணின் அழகை பத்தி அவளிடம் சொன்னால் விரும்பமாட்டாள்" - ஈஸ்வர்

"அது மட்டுமில்ல. உன்னை பத்தி என்னிடம் அடிக்கடி பேசுறா. உனக்கு வைரஸ் பீவர்னு போன வாரம் 4 நாள் வராதப்ப அம்மனி ரொம்ப அப்செட்" - ஸ்பந்தனா

"நான் சொல்றதை சொல்லிட்டேன், உன் இஷ்டம், சரியாக செயல்பட வேண்டிய போது விட்டுட்டு பின்னால வருத்தப்பட்டு பிரயோஜனம் இல்லை" - ஈஸ்வர்

"சரி எனக்கு ஒரு சின்ன வேலை இரூக்கு, நான் கிளம்புறேன்" - கதிர்

"ஓ.கே நாளைக்கு பார்க்கலாம்" - ஸ்பந்தனா,ஈஸ்வர்

"கதிர்" குரல் கேட்டு திடுக்கிட்டு பஸ்ஸில் இருந்து வெளியில் பார்த்தான் கதிர். காந்தி மண்டப வாசலில் இருந்து அழைத்தது நித்யாவேதான்.

பஸ்ஸில் ஏறுமாறு சைகை செய்தான். அவனருகில் ஏறி அமர்ந்த நித்யா "ஏன் இவ்வளவு லேட்? அவங்க ரெண்டு பேரும் எங்க?" என்றாள்

"இன்னைக்கி எல்லாருக்கும் வேலை இருந்ததால் கிளம்பிட்டாங்க. உன்னிடம் சொல்லிட்டு கிளம்பலாம்னு நான் மட்டும் வந்தேன்" சமாளித்தான் கதிர்

பஸ் சைதாப்பேட்டையை தாண்டி இருந்தது.

"உன் கிட்ட கொஞ்சம் பேசனும்" - கதிர்

"உம் ?" - நித்யா

"நாம ரெண்டு பேரும் லவ் பண்றோம்னு இன்ஸ்டியூட்ல பேசிக்கிறாங்களாம். ஈஸ்வர் சொன்னான். அப்படியா?"

சந்திப்புகள்

திரைப்படக்கல்லூரியில் சேர நேர்முகம் முடித்துவிட்டு அமர்ந்திருந்தான் கதிர். தோளில் யாரோ கை வைப்பது பொல் உணர்ந்தவன் திரும்பிப் பார்த்தால், சராசரி உயரத்தில், அரும்பு மீசையுடன் ஒரு உருவம் சினேகமான புன்னகைத்தது.

"ஹாய், நான் காமெஸ்வரன், ஈஸ்வர்னு கூப்பிடுவா. ஆக்டிங்ல சேர்ந்திருக்கேன்"

"ஹல்லோ, நான் கதிர்வேல், - கதிர். சினிமெடோ கிராப்பியில சேர்ந்திருக்கேன்"

"எனக்கு வரும் வியாழக்கிழமை முதல் வகுப்பு ஆரம்பம். உங்களுக்கு ?"

"எனக்கும் தான்"

"சரி. நேரம் ஆச்சி, தி.நகர் போகனும், மறுபடியும் பார்க்கலாம்"

"நானும் தி.நகர் வழியாகத்தான் சாலிகிராமம் போகனும், வாங்க ரெண்டு பேரும் சேர்ந்தே போலாம்"

மத்திய கைலாஷ் வரை நடந்தார்கள்.

பஸ்ஸில் ஏறி அமர்ந்தார்கள். பஸ் கிளம்பிய சமயத்தில் ஒரு தேவதை ஓடி வந்து பஸ்ஸில் ஏறி அமர்ந்து இருவரையும் நோக்கி புன்னகைத்தது.

"வணக்கம், என் பெயர் ஸ்பந்தனா, ஆக்டிங்ல சேர்ந்திருக்கேன். உங்க ரெண்டு பேரையும் தரமனியிலிருந்தே தொடர்ந்து வர்றேன்

"ஈஸ்வர், உங்களுக்கு கிளாஸ்மேட் கிடைச்சாச்சு" - கதிர்

"ஆமாமா, அழகான கிளாஸ்மேட்" - ஈஸ்வர்

கலகலவென முத்துப்பற்க்கள் பளிச்சிட சிரித்தாள் ஸ்பந்தனா.

ஸ்பந்தனா சைதைக்கு டிக்கெட் எடுத்ததை மனதில் பதித்தான் ஈஸ்வர்.

கதிர், பஸ்ஸில் யாரோ தன்னை பார்த்துகொண்டிருப்பதாக உணர்ந்தான்.

வியாழக்கிழமை-

வகுப்புகள் ஆரம்ப நாளின் உற்சாகத்தில் நகர்ந்தது. கதிர், ஸ்பந்தனா, ஈஸ்வர் மூவரும் மாலையில் வகுப்புகள் முடிந்ததும் சிறிது நேரம் பேசிவிட்டு ஒரே பஸ்ஸில் செல்வதை வழக்கமாக்கினர்.

ஸ்பந்தனா சைதாப்பேட்டையில் இறங்க, தி.நகர் வரை ஈஸ்வருடன் சென்று சாலிக்கிராமத்திற்கு மற்றோர் பஸ்ஸில் பயனித்தான் கதிர்.

இன்றும் பஸ்ஸில் யாரோ தன்னை பார்த்துகொண்டிருப்பதாக உணர்ந்தான் கதிர்

ஒரு நாள், மாலை அரட்டையில் ஸ்பந்தனாவோடு குஷ்பு பொல கொழுகொழுவென்று ஒரு பெண் வந்தாள்.

"இது நித்யா - வடபழனி , டைரக்சன் படிக்கிறாங்க" - ஸ்பந்தனா

"கதிர் சாலிக்கிராமம் தாங்க, உங்களுக்கு பஸ்ஸில இனி ஒரு பேச்சு துனை இருக்கு" - ஈஸ்வர்

"ஹாய் ஆல், என்ன இன்னும் நீங்க, வாங்கன்னு, சென்னை கல்ச்சருக்கு மாறுங்கப்பா"

"ஓ.கே டி நித்யா" - ஈஸ்வர்

"இதாண்டா உங்ககிட்ட, கொஞ்சம் விட்டா ஒவரா போவீங்க" - நித்யா

இன்று பஸ்ஸில் நித்யாவோடு செல்லும் போது வழக்கமாக உணர்வது போல் யாரும் தன்னை பார்ப்பதாக தோன்றவில்லை கதிருக்கு.

கனிகாஸ்

அனைவரின் வாழ்விலும் கல்லூரி வாழ்க்கை என்பது இனிய நினைவுகளின் காலம். பொதுவாக கல்லூரியில் ஒரே வகுப்பில் பயிலுவோர் ஒத்த வயதில் இருப்பர். ஆனால் திரைப்படக் கல்லூரியியின் விஷயம் வேறாக இருந்தது (இளநிலை பட்டம் முடித்து விட்டு வருவோரும் பள்ளிப் படிப்பு முடித்து வருவோரும் ஒரே துறையில் பயில்வதால் 3-4 வயது வேறுபாடென்பது சாதாரணமாக இருந்தது.)

சென்னை திரைப்படக்கல்லூரி மாணவர்களிடையே 'கனிகாஸ்' மிகப் பிரபலம்.

கதிர்வேல் - 6 அடி உயரம் ஒல்லியான உருவம், அரும்பு மீசை கொதுமை நிறம். கொங்குச்சீமையில் பிரபலமான 3 எழுத்து கலை அறிவியல் கல்லூரியில் இளநிலை வேதியியல் முடித்துவிட்டு மூன்று வருடங்களுக்கு பின் கேமிரா தொழில்நுட்பம் பயில வந்தவன். தந்தை கோவை அருகே ஒரு கிராமத்தில் ஜமீந்தார். சொத்துக்க்ள் சிதறிவிடாமல் இருக்க, சொந்தத்தில் மணம் முடிக்கும் வழக்கம் இவர்கள் பரம்பரையில் இருந்தது. தாய் மெத்தப் படித்தவர், நிலபுலன்களை பராமரிப்பதில் கனவருக்கு துனையாக இருப்பவர். சென்னை சாலிகிராமத்தில் அத்தை வீட்டில் தங்கியிருக்கிறான்.

நித்யா - திருப்பதியில் மின்பொறியியல் படித்துவிட்டு இயக்குனராகும் ஆசையில் திரைப்பட இயக்கம் படிக்க வந்தவள். தாய்மொழி தெலுங்கென்றாலும் சிறப்பாக தமிழ் பேசுவாள். தந்தை தாய் இருவரும் அரசு ஊழியர்கள் . தாய் சிறந்த அறிவாளி. தந்தை, தாய் சொல்லை தட்டாதவர். ஒரே பெண் என்பதால் மிகச் செல்லமாக வளர்க்கப்பட்டவள் நித்யா. சென்னை வடபழனியில் ஒரு ஹாஸ்டலில் தங்கியிருக்கிறாள்.

காமெஸ்வரன் (ஈஸ்வர்) - இளங்கலை வரலாறு பயின்றவன். நடிப்பில் நாட்டம் காரணமாக திரைப்படக்கல்லூரி படிப்பை தேர்ந்தெடுத்தவன். தந்தை மருத்துவர், காதலித்து மணம் முடித்தவர். கேரளாவிலிருந்து 15 வருடங்களுக்கு முன்பு பணி காரணமாக சென்னைக்கு மாற்றலாகி வந்தவர், தி.நகரில் சொந்த வீடு. ஈஸ்வர் தாய் தந்தையோடிருக்கும் பொது மட்டும் மலையாளத்தில் பேசுவான்.

ஸ்பந்தனா - பள்ளிப் படிப்பு முடித்து திரைப்படக்கல்லூரியில் நடிப்பு பயில வந்தவள். புதுமை விரும்பி. பெயருக்கு ஏற்றார்போல சொக்க வைக்கும் அழகில் செதுக்கிய சிற்பம் பொலிருப்பாள். தந்தையை இழந்தவள். அண்ணன் சென்னையில் உள்ள பிரபல மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிகிறார். தாய் பள்ளிப் படிப்பு வரை முடித்தவர். சைதாப்பேட்டையில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். பூர்வீகம் கர்நாடகாவிலுள்ள தும்கூர்.

இந்த நால்வரையும் சேர்ந்து கல்லூரி வட்டத்தில் 'கநிகாஸ்' என்பர்.