This page contains 'Unicode' Tamil contents. Make sure to set your browser encoding to 'Unicode'. Click here to know how to enable Unicode in your browser.

கனிகாஸ் - நிஜமல்ல கதை


இனிவரும் நாட்களில் என் எண்ணத்தில் வரும் கற்பனை சம்பவங்களை அவ்வப்போது இந்த வலைப்பக்கங்களில் உங்களோடு பகிர்ந்து கொள்ளப் போகிறேன்

தமிழில் நான் சராசரிக்கும் மிக மிகக் கீழ். எனவே எழுத்துப் பிழை/பொருட்பிழை இருப்பின் மன்னிக்க (சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்கிறேன்)

இதுவரை...


கதைச்சுருக்கத்திற்கு, மேலே சொடுக்கவும் (முந்தைய பகுதிகளை விரிவாக படிக்க விரும்புபவர்கள் தேதி வாரியாக கீழிருந்து மேலாகப் படிக்கவும்.)

ரெட்டைச்சூரியனும் ஒற்றைத்தாமரையும்

கல்லூரிப் பூங்காவில் தனியாக அமர்ந்து யோசித்துக்கொண்டிருந்த பைரவியின் அருகில் வந்து அமர்ந்தான் விஸ்வா.

"சாரி பைரவி. நான் மட்டும் உன்னை கதிர் கூட பாடச்சொல்லி கூப்பிடலைன்னா இந்த முறை நீ வழக்கம் பொல ஜெயிச்சிருப்பியில்ல?" - விஸ்வா

"ப்ச். அதனால என்ன பரவாயில்ல. அடுத்தவாட்டி பாத்துக்கலாம்" - பைரவி

"ரொம்ப சாரி" - விஸ்வா

"அத விடு. வேற எதாவது பேசலாம்" - பைரவி

கதிர் பத்தி நீ என்ன நெனக்கிற" - விஸ்வா

"அவனுக்கு நல்ல வாய்ஸ். எஸ்.பி.பி வாய்ஸும் ஜேசுதாஸ் வாய்ஸும் கலந்து வெச்ச மாத்ரி. ஒழுங்கா முறைப்படி கர்னாடிக் மியூசிக் கத்துகிட்டான்னா பெரிய ஆளா வரலாம்" - பைரவி

"உனக்கு தெரிஞ்ச கர்னாடிக் ம்யூசிக் டீச்சர் யாராவது இருந்தாக்க சொல்லேன். அவனைப்போய் கத்துக்கச் சொல்றன்" - விஸ்வா

"சாய்பாபா காலனில விஜயலக்ஷ்மின்னு ஒரு பாட்டு டீச்சர் இருக்காங்க அவங்களுக்கு கர்னாடிக், இந்துஸ்தானி எல்லாம் அத்துபடி. நான் கூட அவங்ககிட்டத்தான் ரெண்டு வருஷமா கத்துக்கறன். நீ வேனும்னா அவனை அங்க வந்து கத்துக்க சொல்லேன்" - பைரவி

"ஓ. அப்பசரி நான் நாளைக்கே அவங்களப்போய் பாக்கச்சொல்லி அவன் கிட்ட சொல்லிடறன்" - விஸ்வா

"குட். அப்றம், வேற எதாவது விஷயம் இருக்கா? நேரமாச்சி நான் வீட்டுக்கு போலாம்னு இருக்கேன்" - பைரவி

"சரி அப்ப கிளம்பு அப்றமா பாக்கலாம். பை" - விஸ்வா

"பை. பை" - பைரவி

மறுநாள் மாலை கல்லூரி முடிந்த பிறகு கல்லூரி காம்பவுன்ட் சுவரில் கதிர், விஸ்வா, ரத்னகுமார் மற்றும் நன்பர்களுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருகின்றனர்.

மாலை நேர ஜமாவில் புதிதாகச் சேர்ந்தவர்கள் வேலுச்சாமியும் அவன் நன்பர்கள் ராஜேந்தர் மற்றும் வாசு. இவர்கள் மூவரும் முந்தயநாள் பாட்டுப் போட்டியில் பழக்கமானவர்கள். மூவரும் ஒன்றாக தங்கி இருக்கிறார்கள்

"வருக வருக 'கானாக்குயில் குப்பத்துராஜா' அவர்களே. தங்கள் வரவு நல்வரவாகுக" - விஸ்வா

வேலுச்சாமி என்றால் கல்லூரியில் யாருக்கும் தெரியாது. கானாப் பாடல்களை நன்றாகப் பாடுவான் என்பதால் அவனுக்கு "கானாக்குயில் குப்பத்துராஜா" என்ற பட்டப்பேர் உண்டு. "கானா" என்று செல்லமாக அழைப்பார்கள்

"என்ன கானா, நேத்து பாட்டுப் போட்டியில ஒரே ரொமான்ஸ் மூட்ல இருந்த போல? புஷ்பவனம் குப்புசாமியோட 'ராசாத்தி ஒன்ன எண்ணி' பாட்டு ஜோரா இருந்திச்சி" - ரத்னகுமர்

"என்ன பண்ணி என்ன பிரியோஜனம், கதிர் ஒரு பழைய பாட்ட பாடி எல்லாரையும் கவுத்துட்டாரு. ஏதோ எனக்கு ப்ரைஸ் கிடைக்கலைன்னாலும் நம்ப ஆளுக்கு க்ரூப் சாங்க்ல பஸ்ட் ப்ரைஸ் கெடச்சிச்சே அதே ரொம்ப சந்தோஷமா இருக்கு" - கானா

"க்ரூப் சாங்க்ல யாரு பூரணியா,சரன்யாவா, இல்ல சங்கீதாவா?" - ரத்னகுமார்

"வேற யாரு சங்கீதாதான்" - ராஜேந்தர்

"என்ன மச்சி சொல்ற நீ சங்கீதாவ லவ் பன்றயா?" - விஸ்வா

"ஐயோடா. அத ஏன் கேக்ற. தெனமும் இவன் தூக்கத்துல ஒளர்ர ஒளரல் எல்லாம் நாங்க தான கேக்றம். எப்பப்பாரு சங்கீதா சங்கீதா சங்கீதாதான்" - வாசு

"நீ சொல்லு கானா, நிஜம்மா நீ சங்கீதாவ லவ் பன்றயா?" - விஸ்வா

"ஆமா விஸ்வா. நான் சங்கீதாவ ரொம்ப சின்சியரா லவ் பன்றன்" - கானா

கதிருக்கு மனதுக்குள் ஆயிரம் வாட்ஸ் மின்னல் ஒன்று பாய்ந்த மாதிரி அதிர்ச்சியாக இருந்தது

"அத அவ கிட்ட சொல்லிட்டியா கானா ?" - விஸ்வா

"இன்னும் இல்ல விஸ்வா, நானு ரெண்டரை வருஷமா நல்ல சமயம் பாத்து சொல்லலான்னு வெயிட் பன்றன், இன்னிக்கு வரைக்கும் சொல்ல முடியல" - கானா

"அது சரி, எப்ப சொல்றதா உத்தேசம் ?" - விஸ்வா

"நீங்கல்லாம் சேர்ந்துதான் எனக்கு இது விஷயமா ஹெல்ப் பண்ணனும்" - கானா

"சரி. நாம கொஞ்சம் வெளிப்படையா பேசறது நல்லது" - விஸ்வா

"வேணாம் விஸ்வா" என்று தடுக்க முயன்றான் கதிர்

"தடுக்காத கதிர், நாமல்லாம் இப்ப ஒத்துமயா இருக்கோம் நீங்க ரெண்டு பேரும் ஒரு போண்ணுக்கோசரம் சண்டை போடற நெலம வர வெணாம்" - விஸ்வா

"என்ன சொல்ற விஸ்வா? கதிரும் சங்கீதாவ லவ் பன்றானா?" - கானா

"ஆமா கானா. அவனும் ரெண்டரை வருஷமா அவளை லவ் பன்றான், உன்னப்போல அவ கிட்ட அவனும் இன்னும் சொல்லலை" -விஸ்வா

அதன் பின் சற்று நேரம் அங்கே மயான அமைதி நிலவியது

"எல்லாரும் அமைதியா இருந்தா எப்படி. இதுக்கு நான் ஒரு தீர்வு சொல்லவா? ரெண்டு பேரும் சங்கீதா கிட்ட போய் உங்க லவ்வப் பத்தி சொல்லுங்க. அவ யாருக்கு ஓ.கே சொல்றாளோ அவன் கன்டினிவ் பண்ணுங்க. இந்த சின்ன விஷயத்துக்காக நம்ம நட்புல விரிசல் வரக்கூடாது." - ரத்னகுமார்

"நீ சொல்ற மாதிரி அது அவ்ளவு சுலபமில்லடா. இவ்ளவு அவசரப்பட வேண்டாம்" - கதிர்

"இப்ப சொல்லாட்டி எப்ப சொல்லப்போறீங்க. இன்னம் 3 மாசத்துல நம்ம காலேஜ் லைபே முடிஞ்சிரும். முடிவாச்சொல்றேன் கேட்டுக்கங்க நாளைக்கு நீங்க ரெண்டு பேரும் அவ கிட்ட போய் உங்க லவ்வச் சொல்லலைன்னாக்க அப்றம் இந்த ரத்னகுமார் அவள கரைக்ட்டு பண்ணீட்டு பொயிகினே இருப்பான்" - ரத்னகுமார்

அத்தோடு அன்றைய மாலை ஜமா முடிந்தது.

இன்னார்க்கு இன்னார் என்று

கல்லூரிப் பூங்காவில் சங்கீதாவைக் கண்ட விஸ்வா அவளிடம், பாட்டுப் போட்டி பற்றி பேச ஆரம்பித்தான்.

"ஹாய் சங்கீ. ஆமா, வர்ற பாட்டுப் போட்டில பாடப் போறியா?" - விஸ்வா

"இல்ல. இந்த வாட்டி போட்டி பலமா இருக்கும் போல இருக்கு. அதனால கலந்துக்கறதா இல்ல" - சங்கீதா

"ஏய், கமான். உனக்கு நல்ல வாய்ஸ் இருக்கு. க்ரூப் சாங்ல நம்ம கதிர் கூட பம்பாய் பட்த்துல வர்ற 'உயிரே' பாட்டு பாட்றான், பீமேல் சிங்கர் தான் இன்னும் செட் ஆவலை. நீ அவனோட சேந்து பாடலாம்ல ?" - விஸ்வா

"நான் சோலோ மட்டும் கலந்துக்கலாம்னு இருந்தேன். புன்னகை மன்னன்ல இருந்து 'வான் மேகம்' பாட்டு பாடலாம்னு"- சங்கீதா

"பரவாயில்ல. அவன் கூட சேந்து 'உயிரே' பாட்டும் பாடலாம். ஜெயிச்சா ப்ரைஸ் மணிய ரெண்டு பேரும் ஷேர் பண்ணிக்கங்க" - விஸ்வா

"ஓ.கே. பட் ஒன் கண்டிஷன். நான் 'கடலோரக் கவிதைகள்' படத்துல வர்ற 'அடி ஆத்தாடி' பாட்டுன்னா கதிர் கூட பாடுறன்" - சங்கீதா

"அதெல்லாம் முடியாது. 'உயிரே' பாட்டுதான்னு முடிவு பண்ணியாச்சி. உன்னால முடியாதுன்னா சொல்லு. நான் வேற யாரயாவது கேட்டுக்றேன்" - விஸ்வா

சங்கீதா "நான் இஷ்டப்பட்ட பாட்டுன்னா பாடுறன். இல்லன்னா முடியாது" என்றாள் பிடிவாதமாக

விஸ்வா ஏமாற்றத்துடன் திரும்பி நடந்து வந்த போது ரத்னகுமாரும் கதிரும் வந்தார்கள்

"என்னடா, கதிர் கூட பாடுறாளாமா ?" - ரத்னகுமார்

"கேட்டன்டா, 'உயிரே' பாட்டு பாடமாட்டாளாம். வேற பாட்டுன்னா பாடுறாளாம்" - விஸ்வா

"என்ன பாட்டுன்னாலும் சரிடா. நான் அவ கூட பாடனும் அவ்ளோதான்" - கதிர்

"போடாங்கு. இப்ப உன் கூட பாடறதுக்கே கண்டிஷன் போட்டா அப்றம் எப்படிடா லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கப்போற" - ரத்னகுமார்

"எல்லாத்லயும் வுட்டு குடுத்து போனா ஒன்னும் ப்ரச்சனை வராதுரா" - கதிர்

"எல்லாம் சரி. இப்ப பாட்டுப் போட்டில சோலோ, க்ரூப் சாங் ரெண்டுலயும் உன் பேர் குடுத்தாச்சி. யாரயாவது க்ரூப் சாங்குக்கு பாட வெச்சே ஆவனும்" - ரத்னகுமார்

"டேய். ஐடியா. செகண்ட் இயர் பைரவியக் கேக்றன். அவ ஒத்துக்கிட்டா ப்ரச்சனை தீந்தது" - விஸ்வா

அரைமணி நேரம் கழித்து வந்தான் விஸ்வா, பைரவியுடன். அங்கேயே பாட்டுப் பயிற்சியை ஆரம்பித்தனர்.

பாடி முடித்ததும்-

"டே கதிர், எல்லாம் நல்லாத்தான் பாடுற. ஆனா பாடும்போது கைய வச்சிகிட்டு சும்மா இருக்காம தலய எதுக்கு சொறியர?" - ரத்னகுமார்

"ரம்ப கஷ்டப்பட்டு பேசி பைரவியக் கூட்டினு வந்துருக்கண்டா. இது வரக்கும் அவ எந்த பாட்டுப்போட்டிலயும் தோத்ததில்ல. அதுமட்டுமில்ல க்ரூப் சாங்ல லேடிஸ் மட்டும் இல்லன்னா ஜெண்ட்ஸ் மட்டும் சேந்து பாடத்தான் அலோடுன்னு உனக்கே தெரியும். உன் கூட சேந்து பாடினா சஸ்பெண்ட் பண்ணிடுவாங்கன்னு தெரிஞ்சும் எனக்காக சரின்னு சொல்லியிருக்கா கவுத்துறாதடா. " - விஸ்வா

"அதெல்லாம் கவலப்படாதிங்கடா. கலக்கிடலாம்" - கதிர்

பாட்டுப்போட்டி நடைபெறும் நேரம் வந்தது. அனைவரும் அரங்கத்தில் கூடி இருந்தனர்

அறிவிப்பாளர் ஒவ்வோருவர் பெயராக அறிவிக்க, சோலோ போட்டி ஆரம்பித்தது.

சங்கீதாவின் பெயர் அறிவிக்கப் பட்டதும் மேடை ஏறி சிப்பிக்குள் முத்து படத்தில் வரும் 'லாலி லாலி' பாட்டு பாடினாள்

கதிர் சோலோவில் 'காலங்களில் அவள் வசந்தம்' பாடினான்

அடுத்ததாக க்ரூப் சாங் போட்டி ஆரம்பித்தது.

சங்கீதாவின் குழு மைக்கேல் ஜாக்சனின் 'ஹீல் த வோல்ட்' பாடினார்கள். விஸ்வாவின் மனதுக்குள் சங்கீதா ஏன் பொய் சொன்னாள் என்ற எண்ணம் ஓடியது

கதிரின் முறையும் வந்தது.

"அடுத்து வருபவர் பைரவி கதிர்" - அறிவிப்பாளர் அனைவரும் ஆச்சர்யமாகப்பார்த்தனர்

தவற்றை உணர்ந்த அறிவிப்பாளர் மீண்டும் அறிவித்தார் "அடுத்து வருபவர் பைரவி மற்றும் கதிர்".

ஆணும் பெண்ணும் சேந்து பாடினா சஸ்பெண்ட் பண்ணிடுவாங்கன்னு தெரிஞ்சும் பாட வந்து இருக்காங்க என்று கூட்டத்தில் சில பேர் கிசுகிசுத்தனர்.

இருவரும் மேடை ஏறி பாடி முடித்தனர். தொடர்ந்து இன்னும் சிலரும் பாடி முடித்தனர்.

முடிவுகள் அறிவிக்கப்பட்டது. சோலோவில் கதிர் வெற்றி பெற்றான். க்ரூப் சாங்கில் சங்கீதாவின் குழு வெற்றி பெற்றது.

பைரவி தோல்வியை ஏற்று சிறு புன்னகை தவழ அரங்கை விட்டு வெளியேறினாள்.

அவளை சமாதானப்படுத்த விரைந்த விஸ்வாவின் மனதில் சங்கீதாவின் பொய்யும் அறிவிப்பாளர் கதிரையும் பைரவியையும் அறிவித்த விதமும் மாறி மாறி வந்தது.

அந்த நாள் ஞாபகம்

"இது யாருடா? திரும்பவுப் லவ்வா ?" என்றான் விஸ்வபரதி

"சேச்சே! ப்ரெண்டுடா, பேரு நித்யா. இன்ஸ்டியூட்ல டைரக்ஷன் படிக்கிறா. ஓ! உனக்கு தெரியாதில்ல, நான் இப்ப சினிமெட்டோ கிராப்பி பண்றன்டா" - கதிர்

"அதானே பார்த்தேன், எங்கடா சங்கீதா விஷயத்தில பட்ட காயத்தை அதுக்குள்ள மறந்துட்டியோன்னு நெனச்சேன்" - விஸ்வபரதி

"அது யாரு சங்கீதா?" - நித்யா

"அது ஒரு பெரிய கதை. அப்ப நாங்க ஆர்ட்ஸ் காலேஜ்ல படிச்சிக்கிட்டிருந்தோம்" - கதிர்வேல்

(ப்ளாஷ்பேக் - அவரவர் வசதிப்படி கொசுவத்தி சுருளை உருட்டலாம், ட்ரொய்ய்ய்ய்ய்ங் சவுண்ட் கொடுத்துக்கலாம் அல்லது வேறேதேனும் கிராபிக்ஸ் எபெக்ட் கொடுக்கலாம்)

கலைக்கல்லூரியில் ஒரு நாள் -

"வாடா ரத்னகுமார். எப்படி போச்சி செமஸ்டர் லீவெல்லாம் ?" - கதிர்

"செம மஜா! மூனு வாட்டி வெத்தலை போட்டேன் - காஞ்சிப்போன வெத்தலை தான் ஆனா ஓ.கே"
(ரத்னகுமார் கஞ்சாவை வெத்தலை என சொல்வான்)

"திருந்தவே மாட்டியாடா?" - கதிர்

"என்னத்துக்கு அவன் திருந்தனும்? அவன் கெட்டாத்தானே திருந்தறதுக்கு. இப்ப, நீயே ஒரு பெரிய பிசினஸ்மேன் ஆவுறன்னு வெச்சிக்க, ஒரு தண்ணி பார்ட்டிக்கி இல்லன்னா மஜா பார்ட்டிக்கி பொவுறன்னு வெச்சிக்க அங்க தண்ணி அடிச்சா தள்ளாடாம இருக்கனும்ல, அதுக்கு தான் இப்ப இருந்தே எல்லா கிக்கும் மேனேஜ் பண்றதுக்கு ப்ராக்டிஸ் எடுத்துக்கன்னு சொல்றேன்" - விஸ்வபாரதி

"இப்படி சொல்லிச் சொல்லித்தான் தம்மு, பீரு அப்றம் ஹாட் எல்லாம் அடிச்சம். போதும்டா. எந்த ஹைக்கிளாஸ் பார்ட்டியிலயும் கஞ்சால்லாம் அடிக்க வேண்டி வராது" - கதிர்

"ஓ.கே அவனவனுக்கு எப்ப எதச் செய்யனும் எத நிறுத்தனும்னு தெரியும். இதுல தலையிடாத" - விஸ்வபாரதி

"ஏதோ நல்ல புத்தி சொல்றேன். அப்றம் உன் இஷ்டம்டா ரத்னா" - கதிர்

"டேய் அதெல்லாம் விடு. 2 வருஷமா நீயும் சங்கீதாவும் ஒருத்தர ஒருத்தர் பார்த்துக்றீங்க, கண்ணால பேசிக்றீங்க. உன் லவ்வை எப்பச் சொல்றதா உத்தேசம் ?" - ரத்னகுமார்

"காலேஜ் கல்சுரல் செக்ரேட்டரி எலக்சன் வருதில்ல. அதுல நின்னு ஜெயிச்சப்றம் சொல்லலாம்னு இருக்கேன்" - கதிர்

"டேய் உன்ன எதுத்து நிக்கிற அர்ஜுன்க்கு ஸ்டுடண்ட்ஸ் கிட்ட பவர் ஜாஸ்திடா. எப்படி ஜெயிக்கப் போற" - ரத்னகுமார்

"நமக்கும் ஓரளவுக்கு சப்போர்ட் இருக்குடா. அது போக நடுநிலையா இருக்கிற ஸ்டுடண்ட்ஸ் கிட்ட பேசி எப்படியாவது உள்ளாற விளையாடியாவது உன்னய ஜெயிக்க வக்கிறன்டா கதிரு" - விஸ்வா

"கல்சுரல் செக்ரேட்டரியா ஆவறது மட்டுமில்லடா. வர்ற பாட்டுப் போட்டியில சங்கீதாவோட சேர்ந்து பம்பாய் படத்துல வர்ற "உயிரே..." பாட்டு பாடனும்" - கதிர்

"தம்பி! பொண்னோட சேந்து பாடினா சஸ்பெண்ட் பண்ணிருவாங்கப்பா!" - ரத்னகுமார்

"அதப்பத்தி எல்லாம் கவலைப்படாதேடா. எப்படியாவது உன்னோட இந்த ஆசையையும் நிறைவேத்த வழி பாக்கலாம். ஆனா ஒன்னுடா உன் காதல் உண்மையானதுன்னா கண்டிப்பா கல்யாணத்துல முடியும். இல்லன்னா இப்ப நாம பண்ற அத்தனையும் வேஸ்ட்" - விஸ்வா

"கண்டிப்பா நான் ஜெயிப்பன்டா. எலக்சன்லயும்... காதல்லயும்......"

ஒரு வாரம் ஓடியது. கதிருக்காக எல்லாரிடமும் விஸ்வாவும் நன்பர்களும் பேசி ஓட்டு சேகரித்தார்கள்

எலக்ஷன் முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டது

அர்ஜுன் எதிர்பாரா விதமாகத் தோற்றுப் போயிருந்தான். கதிர் தன் நன்பர்களுடன் வெற்றிக்களிப்பில் மூழ்கிக் காணாமலே போனான்.

கல்லூரியின் பாட்டுப்ப்போட்டி அறிவிப்பும் வந்தது. மூன்றே நாட்கள் இருந்தது.