This page contains 'Unicode' Tamil contents. Make sure to set your browser encoding to 'Unicode'. Click here to know how to enable Unicode in your browser.

கனிகாஸ் - நிஜமல்ல கதை


இனிவரும் நாட்களில் என் எண்ணத்தில் வரும் கற்பனை சம்பவங்களை அவ்வப்போது இந்த வலைப்பக்கங்களில் உங்களோடு பகிர்ந்து கொள்ளப் போகிறேன்

தமிழில் நான் சராசரிக்கும் மிக மிகக் கீழ். எனவே எழுத்துப் பிழை/பொருட்பிழை இருப்பின் மன்னிக்க (சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்கிறேன்)

இதுவரை...


கதைச்சுருக்கத்திற்கு, மேலே சொடுக்கவும் (முந்தைய பகுதிகளை விரிவாக படிக்க விரும்புபவர்கள் தேதி வாரியாக கீழிருந்து மேலாகப் படிக்கவும்.)

ஒய்யாரக் கொண்டையாம் உச்சியிலே தாழம்பூவாம் ...

யோசித்துப் பார்த்தபோது சங்கீதா கதிரை விரும்பவில்லை என்றுதான் தோன்றியது ரத்னகுமாருக்கு.

மறுநாளே சோதித்துப் பார்க்க முடிவுக்கு வந்தவனாக அதற்கான திட்டங்களைத் தீட்டினான்.

மறுநாள் கல்லூரியில் கதிரைப் பார்த்த சங்கீதா, புன்னகைத்து "எப்டி. இருக்க கதிர்" என்றாள்.

"நான் நல்லாயிருக்கேன். நீ எப்டி இருக்க சங்கீ? பாத்து ரொம்ப நாளாச்சி" - கதிர்

"ரெண்டு வாரமா காலேஜுக்கு நான் லீவு. ஊருக்கு போயிருந்தேன். நேத்து தான் வந்தேன். வந்தப்றம்தான் எல்லா விஷயமும் தெரிஞ்சது. சரி காலேஜ்ல உன்ன பாத்துக்கலாம்னுதான் ஆஸ்பத்திரிக்கு வரல" - சங்கீதா

"பரவாயில்லை. எல்லாந்தான் நல்லபடியா முடிஞ்சதே. செமஸ்டர் வருது, இனிமேதான் படிக்க ஆரம்பிக்கனும்" - கதிர்

சிறிது மௌனத்துக்குப் பின் இருவரும் வகுப்புக்கு செல்ல கலைந்தார்கள்.

மறுநாள் கதிர் சங்கீதாவைப் பார்த்தபோது வழக்கமான புன்னகை இல்லை.

"என்னாச்சி சங்கீ" - கதிர்

"ஒன்னுமில்லை. உன்கிட்ட கொஞ்சம் சீரியஸா பேசனும்." - சங்கீதா

"சொல்லு. என்ன விஷயம்"- கதிர்

"நாம பேசாம நண்பர்களா மட்டும் இருந்துடலாம் கதிர்" - சங்கீதா

"என்ன சொல்ற!" அதிர்ந்தான் கதிர்

"ஆமா. வாசு விஷயத்துல காதல்னால பட்ட கஷ்டத்தைப் பார்த்தா நம்ம வீட்ல அந்த மாதிரியெல்லாம் எதுக்கு பெத்தவங்களை வருத்தப்பட வைக்கனும்னு தோனுது." - சங்கீதா

"அதெல்லாம் எதிர்பார்த்தது தானே. இப்ப ரெண்டு பேர் வீட்லயும் சமாதானமா போய் வாசு சந்தோசமா இல்லையா" - கதிர்

"இல்ல... எனக்கு இது சரிபட்டு வரும்னு தோனலை நாம நண்பர்களாவே இருப்பம்" - சங்கீதா

நடப்பதை மெதுவாக உணர்ந்த கதிர் தீர்மானமாய் சொன்னான் "உன்னை மாதிரி நட்பை காதலாவும் காதலை நட்பாவும் மாத்தி கொச்சைப்படுத்திக்க எனக்கு தெரியாது. கடைசிவரை நட்பு நட்புதான், காதல் காதல்தான். அப்டித்தான் நான் வளர்ந்தேன். அப்டித்தான் இருப்பேன். உனக்கு பிடிக்கலைன்னா நீயும் நானும் ஒரு கல்லூரியில படிச்சவங்க அப்டின்ற உறவோட நிறுத்திக்கலாம்." - கதிர்

பதிலேதும் சொல்லாமல் கிளம்பினாள் சங்கீதா

அதன் பின் எங்கு பார்க்க நேர்ந்தாலும் அறிமுகமில்லாத நபர்களைப் பார்ப்பதைப் போலவே கதிரைப் பார்த்தாள் சங்கீதா.

கதிருக்கு மனவருத்தமிருந்தாலும் படிப்பிலே கவனம் செலுத்த ஆரம்பித்ததால் காதல் தோல்வி அவ்வளவாக பாதிக்கவில்லை. சங்கீதா ஏன் திடீரென காதலை முறித்தாள் என்பது மட்டும் விளங்கவே இல்லை.

சிலநாட்களுக்கு பின் மருதமலையில் தமிழ்க் கடவுளை வணங்கி வரச் சென்ற கதிர். மலை இறங்கும் போது பாதைக்கு தள்ளி இருந்த இளைப்பாறும் இடங்களில் ஒன்றில் பழகிய முகமொன்று தெரிய, உற்று நோக்கினான்.

அங்கே அவன் கண்ட காட்சி...

ரத்னகுமாரோடு சங்கீதா!

இருவரும் நெருக்கமாக அமர்ந்து காதலர்கள் போல பேசிக்கொண்டிருந்தார்கள்.

பார்க்காதது போல முகம் திருப்பிக் கொண்டு கீழிறங்கிய கதிரை ரத்னகுமார் மட்டும் கவனித்துவிட்டான்.

மறுநாள், ஏதும் பேசாமல் வெறித்த பார்வையோடு அமர்ந்திருந்தான் கதிர். மௌனத்தை உடைத்த ரத்னகுமார் "உன்கிட்ட சொல்லாம செஞ்சாத்தான் உண்மையான விளைவு தெரியும்னு அப்ப சொல்லலை. நடந்ததை இப்ப சொல்றேன் கேளு."

வெறுப்பாய் அவனைப் பார்த்தான் கதிர்

"நீ கத்திக் குத்து பட்டப்பவும் அதை சமாளிக்க கட்டப்பஞ்சாயத்துக்கு நாங்க போனப்பவும் ஒரு முறையாவது உன்னை பார்க்க அவ வருவா அப்டின்னு நெனச்சேன். வராதப்பவே எங்கயோ தப்புன்னு தோனுச்சி" - ரத்னகுமார்

மௌனமாய் கதிர்.

"நீ நெனைக்கற அளவுக்கு தூய காதலெல்லாம் அவ கிட்ட இல்லை. உங்க காதலை உடைக்க ஒரு உன்னப்பத்தி பொய்யும் என்னப்பத்தி ஒரு பொய்யும் ஒரு உண்மையும் சொன்னேன். அவ்ளவுதான்" - ரத்னகுமார்

என்ன என்பது போல தலையசைத்தான் கதிர்

"கத்தி ஏடாகூடமா குத்திட்டதால இனிமே உனக்கு குழந்தை பெற தகுதியில்லைன்னு ஒரு பொய். அப்றம் அவளை நான் காதலிக்கிறதா ஒரு பொய். அப்றம் எனக்கு இருக்குற சொத்து பத்தி ஒரு உண்மை. அதோட முடிவு தான் நேத்து நீ மருதமலையில பார்த்தது."

ச்சீ என்றானது கதிருக்கு. சங்கீதாவினை நினைத்தால் குமட்டிக் கொண்டு வந்தது

"உனக்காக என் வாழ்க்கையை அழிச்சிகிட்டேனோன்னு நெனைக்காத, இவளை எப்படி கழட்டி விடனும்னு எனக்கு தெரியும். அப்ப கூட எனக்கப்றம் யாரு கூட சுத்தறதுன்னு அவ நெனைப்பாளேயொழிய வேற எந்த துக்கமும் அவளுக்கு கெடையாது" - ரத்னகுமார்

(ப்ளாஷ்பேக் முடிஞ்சி போச்சி! எங்க இருக்குறோம்னு குழப்பமா இருக்குதா? கதிர், விஸ்வா, நித்யா எல்லாரும் சென்னை அடையாறில் ஒரு ஓட்டலில் உக்காந்து பேசிக்கிட்டு இருக்காங்க)

"அப்றம் கொஞ்ச நாள் எல்லா பொண்ணுங்க மேலயும் வெறுப்பா திரிஞ்சிகிட்டு இருந்தேன். விஸ்வாதான் பேசிப் பேசி சகஜ நேலமைக்கு கொண்டு வந்தான். இன்னிக்கு நான் நல்லா இருக்குறேன்னா அதுக்கு இவனும் ஒரு காரணம்" - கதிர்

"பழைய கதையெல்லாம் போதும். இப்ப என்ன பன்றீங்க மிஸ்டர் விஸ்வா?" - நித்யா

"மிஸ்டர் எல்லாம் வேணாம். என்னை விஸ்வான்னே கூப்பிடுங்க நித்யா . இப்ப ஐ.ஏ.எஸ்க்காக படிக்க ஆரம்பிச்சிருக்கேன். சரி நேரமாயிடுச்சி இன்னோரு நாள் பாக்கலாம்" தொடர்பு விவரங்களை அறிந்து கொண்டு பிரிந்தான் விஸ்வா

"சரி கதிர். அடுத்த வாரம் பார்க்கலாம்" நித்யாவும் கதிரும் சாப்பிட்டதற்கு பணம் கொடுத்துவிட்டு கிளம்பினர்


நீங்க சொல்லுங்க

நினைத்ததை நடத்தியே முடிப்பவன்

சூரியனை மறைக்கும் மேக மூட்டத்துடன் ரம்யமான சூழல் நிலவியது. சாலையின் இரு புறங்களிலும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பசுமையான நிலப்பரப்பு. பொள்ளாச்சி வரை பயணம் செய்ததாகவே தெரியவில்லை அவர்களுக்கு.

பொள்ளாச்சியை அடைந்தவுடன் வாசு மட்டும் இறங்கி, அவன் காதலியை கூட்டிவரப் போக, அவர்களனைவரும் வண்டியிலேயே காத்திருக்க ஆரம்பித்தனர். அரைமணி நேரம் தவிப்பாய் கழிந்தது.

தூரத்தில் வாசு மட்டும் வந்து கொண்டிருந்தான். அவன் கையில் ஒரு பெட்டி இருந்தது. வண்டிக்கு வந்தபின் "வண்டிய எடுங்கடா! போகலாம், போற வழில அவ ஏறிப்பா" என்றான்.

அவன் சொன்னபடி வண்டி கிளம்பிய சிறிது நேரத்திலேயே வேகமாய் ஓடி வந்து அவன் காதலி ஏறிக் கொண்டாள்.

மீண்டும் கோவை நோக்கிப் பயணித்தார்கள்.

மருதமலையை அடைந்த பின் ஏற்கனவே சொல்லி வைத்தது போல எல்லாம் தயாராய் இருந்தது. வாசு தாலியை கட்ட, நண்பர்கள் முன்னிலையில் நல்லபடியாக அவர்கள் திருமணம் முடிந்தது.

வாசு இதற்காக வெகுநாள் திட்டமிட்டிருப்பான் போல.. பதிவாளர் அலுவலகத்திலும் எல்லாம் தயாராய் இருந்தது. கதிர்,ரத்னகுமார், விஸ்வா, கானா ஆகியோர் சாட்சி கையெழுத்திட, அங்கேயும் எல்லாம் நல்லபடியாக முடிந்தது

மேற்கொண்டு ஆக வேண்டிய அனைத்தையும் கவனித்துவிட்டு திரும்பிய போது இரவு வெகுநேரம் ஆகிவிட்டிருந்தது.

மறுநாள் வாசுவைத் தவிர எல்லோரும் கல்லூரிக்கு சென்றனர். வாசுவின் மனைவியின் தம்பி பாபு அன்று கல்லூரிக்கு வரவில்லை.

அன்று மாலை வாசுவின் மாமனார் மற்றும் சிலருடன் பேச்சு வார்த்தை நடந்தது. கடைசியில் சமாதானமாகி, வாசுவின் குடும்பத்துடன் அவனது மாமனார் குடும்பம் சுமுகமாகிப் போனது. அதன் அடையாளமாக அடுத்த நாள் பொள்ளாச்சியில் ரிசெப்ஷன் வைப்பதற்கான ஏற்பாடுகளை கவனித்தார் அவர்.

இத்தனை கலாட்டாவில் பாபுவை எங்குமே காணவில்லை.

இந்த வெற்றியை கொண்டாடவும் வாசுவின் தேனிலவுக்கு ஏற்பாடுகளை கவனிக்கவும் வீஸ்வா, ரத்னகுமார், கானா மற்றும் சிலருடன் ஊட்டிக்கு சென்றனர். சொந்த வேலையிருந்ததால் கதிர் மட்டும் விஸ்வாவின் அறையிலே தங்கினான்.

வேலையை முடித்துவிட்டு அறைக்கு திரும்பிய கதிர், சாப்பிட்டுவிட்டு புத்தகம் படித்துக்கொண்டிருந்தான். இரவு சுமார் ஒன்பது மணியிருக்கும், திடீரென்று அறைக்கதவை உடைத்துக்கொண்டு ஏழெட்டு பேர் கூச்சலிட்டபடி கதிர் மீது பாய்ந்தனர்.

இதைச் சற்றும் எதிர்பாராத கதிர் சுதாரித்துக் கொண்டு முடிந்தவரை போராடினான். இருட்டாயிருந்ததால் சரியாக உருவங்களை அடையாளம் தெரியவில்லை. "எங்கக்கா வாழ்க்கைய கெடுத்திட்டீங்களேடா" என்றபடி பாய்ந்த உருவத்தையும் குரலையும் அடையாளம் காண யோசித்த கதிரின் வயிற்றில் கூரிய கத்தியை இறக்கிவிட்டு ஓடினான் பாபு.

கதிருக்கு கண்களில் இருள் கவ்வியது. பக்கத்து வீட்டின் கதவு வரை தரையோடு தரையாக உடலை தேய்த்துக் கொண்டு வந்தவன் கதவை பலம் கொண்ட மட்டும் தட்டிவிட்டு சரிந்து விழுந்தான். கதவை திறந்த பக்கத்து வீட்டுக்காரர் அதிர்ந்துபோய் அவனை தூக்கிக் காரில் போட்டு மருத்துவமனைக்கு விரைந்தார்.

கண் விழித்துப் பார்த்தான் கதிர். கவலையோடு சுற்றியமர்ந்திருந்த விஸ்வாவும் ரத்னகுமாரும் சற்றே நிம்மதியுடன் புன்னகைத்தனர்.

"நீ இங்க வந்து ரெண்டு நாளாச்சிரா கதிர். எங்க பக்கத்து வீட்டுக்காரர் தான் உன்னை இங்க சேர்த்திருக்கார். இல்லன்னா இன்னேரம் உன்னை உயிரோடவே பாத்திருக்க முடியாது. நல்லவேளை இந்த ஆஸ்பிட்டல் டாக்டரை அவருக்கு தெரியும், அதனால விஷயம் போலீஸ் கேஸாகலை. யார் உன்னை கத்தியால குத்தினது தெரியுமா? வாசுவோட மச்சான் பாபுடா" - விஸ்வா

தெரியும் என்பது போலத் தலையசைத்தான் கதிர்.

"அவனுக்கு எங்க வீட்டை தெரியாதுடா. வாசுதான் ஓளறியிருக்கான். நம்ம எல்லாரையும் தீர்த்துகட்டிடலாம்னு ஆளுங்கள கூட்டி வந்திருக்கான் பாபு. நீ மட்டும் மாட்டிகிட்ட" - விஸ்வா

வேதனையாய் புன்னகைத்தான் கதிர். எழுந்து உட்கார முயன்றவனின் அடிவயிற்றில் தையல் வலித்தது.

"இந்த ரெண்டு நாள்ல விஷயம் ரொம்ப பெரிசாயிடுச்சி. நான் அடிக்கடி சொல்வேனே 'வேளச்சேரி விஜயன்' இவர்தான். இவரை வரச்சொல்லி அத்தனை பேரையும் சமாளிச்சோம்"

விஸ்வா காட்டிய இடத்தில் ஆறடி உயரத்தில் (மூன்றடி அகலத்தில்) தடித்த உருவத்துடன் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.

"பாபுவை கொல்லனும்டா விஸ்வா" மெதுவாய் பேசிய கதிரின் முகத்தில் கோபம் இருந்தது

"வேனாம் தம்பி, நான் சொல்லுறத கேளுங்க, இனிமே அவன் உங்க கிட்ட வாலாட்ட மாட்டான். நான் இங்க லோக்கல் ரவுடிங்க கிட்ட பேசிட்டேன். படிக்கிற காலத்துல இந்த மாறி ஒருத்தர ஒருத்தர் அடிச்சிகிட்டீங்கன்னா அப்றம் வாழ்க்கை தடம் மாறிடும். நான் கூட படிச்சவன். கடைசி வருஷம் ஒரு சின்ன தகறாரில ஒருத்தன் கைய வெட்டிட்டேன். அப்ப ஆரம்பிச்சி இப்பவரைக்கும் நார்மல் வாழ்க்கைக்கு திரும்ப முடியல" என்றார் வேளச்சேரி விஜயன்

இரண்டு நாட்களுக்கு பின் சற்றே தேறிய கதிர் கல்லூரிக்கு செல்ல ஆரம்பித்தான்.

கத்தி குத்துபட்டு கதிர் மருத்துவமனையிலிருந்த போது அவனைப் பார்க்க சங்கீதா ஏன் வரவில்லை எனத் தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தான் ரத்னகுமார்.


நீங்க சொல்லுங்க

மடை திறந்து பாடும் நதியலை

அன்று சங்கீதாவின் பிறந்தநாள்.

முன்தினம் குறைவாகத் தூங்கிய சுவடே இல்லாமல் உற்சாகமாய் இருந்தான் கதிர். மோதிரத்தின் சாட்டின் பேக்கிங்கின் மேல் திருப்தியில்லாமல் ஒரு கேட்பரிஸ் எக்லேர்ஸ் சாக்லேட்டிற்க்கு சூட்டி மீண்டும் அழகாக பேக் செய்தான். அத்தோடு ஒரு மினி கார்ட் வைத்து "For the one with sweetest heart" என்று எழுதி கையெழுத்திட்டான். திருப்தியடைந்தவன் கல்லூரிக்கு சென்றான்.

அன்று முழுவதும் ஏனோ சங்கீதாவைக் காணவில்லை.

மாலையில் ஏமாற்றத்தோடு வீடு திரும்ப நினைத்தவன் கல்லூரி வாசலருகே புன்னை மரத்தடியில் நின்றிருந்த சங்கீதாவைப் பார்த்தவுடன் குஷியானான்.

ஓட்டமும் நடையுமாக அவளிடம் சென்ற அவன் மூச்சு வாங்க "சங்கீதா! உன்னைய... எங்கல்லாம... தேடறது..., ஹாப்பி பர்த்டே. இந்தா... உனக்கு ஒரு... சின்ன சர்ப்ரைஸ்" என்றான்

"தாங்ஸ். இந்தாங்க ஸ்வீட். என்ன அது?" என்றபடி அவனிடமிருந்து வாங்கிப் பிரித்தாள்.

சாக்லேட்டை சுற்றியணைத்தபடி இருந்த மோதிரத்தைப் பார்த்த சங்கீதாவின் கண்கள் பிரகாசித்தன.

"ரொம்ப நாளா எப்படிச் சொல்றதுன்னு தவிச்சிக்கிட்டு இருந்தேன்" என்ற கதிரை என்ன என்பது போல பார்த்தாள்.

"நான் உன்னை சின்சியரா லவ் பண்றேன் சங்கீ. நீ என்னை லவ் பண்றயா?" என்றான் கதிர்.

மோதிரத்தைப் பார்த்துக்கொண்டிருந்தவள் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். மெலிதாகப் புன்னகைத்தவள் பஸ் வருவதைப் பார்த்தவுடன் பதிலேதும் சொல்லாமல் ஓடினாள்.

பின்னாலேயே "இப்படி பதில் சொல்லாம ஓடினா எப்படி. ஸே எஸ் ஆர் நோ!" என்று கத்தியபடி ஓடினான் கதிர். பஸ்ஸில் ஏறிய சங்கீதா அவனைத் திரும்பிப் பார்த்து தலையையும் கையையும் அசைத்தாள். கைகளில் சற்று முன் கதிர் அளித்த மோதிரம் இருந்தது.

மறுநாள் மாலை, நடந்ததை விஸ்வாவுக்கும் ரத்னகுமாருக்கும் உற்சாகமாக விவரித்துக் கொண்டிருந்தான் கதிர். தூரத்தில் கானா, வாசு, ராஜேந்தர் வருவதைப் பார்த்தவுடன் அனைவரும் அமைதியானார்கள்.

கானா நேராய் வந்து கதிருடன் கைகுலுக்கினான். "சங்கீதா உன்னைய லவ் பண்றாலாமே! கங்கிராட்ஸ்டா"

"சேச்சே! யாருடா சொன்னது உனக்கு." - கதிர்

"நேத்திக்கு நீ அவளுக்கு மோதிரம் குடுத்தது, அவ உன் காதலுக்கு ஓ.கே சொன்னது, இப்ப அத நீ என்கிட்ட சொன்னா நான் வருத்தப்படுவேன்னு மறைக்கிறது, எல்லாந் தெரியுன்டா எனக்கு" - கானா

கதிருக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.

"நீ நெனைக்கிற மாதிரி எனக்கொன்னும் வருத்தமில்ல. அவ என்னை அவமானப்படுத்தினப்பவே அவளை மறந்துட்டேன்."
- கானா

எல்லோரும் கானாவைக் அமைதியாகப் பார்த்தார்கள்

"இப்பகூட அவ உனக்கு காதலியா இருக்கலாம் எனக்கு எப்பவுமே அவ எதிரி தான். ஒரு நாள் நான் பெரிய ஆளா வருவேன் அப்ப அவளுக்கு தெரியும் இந்த கானா யாருன்னு" - கானா

"மச்சி! உங்க பஞ்சாயத்த அப்றம் வச்சிக்கங்க. எனக்கு இப்ப அவசர உதவி ஒன்னு தேவைப்படுது" -வாசு

"என்னடா. உனக்கும் லவ்வா?" என்றான் விஸ்வா கிண்டலாக

"ஆமா. ஆனா நான் ஒரு வருஷம் முன்னாலயே ஆரம்பிச்சிட்டேன். இப்ப அவ வீட்ல அவளுக்கு அவசரமா கல்யாணம் பண்ணப் பாக்றாங்க" - வாசு

"பொண்ணு யாருடா வாசு?" - ரத்னகுமார்

"நம்ம காலேஜ் இல்லடா. பொள்ளாச்சியில எங்க பெரியம்மா வீட்டுக்கு பக்கத்து வீடு. அவங்க தம்பி பாபு, நம்ம காலேஜ்ல தான் பஸ்ட் இயர் படிக்றான் இவ சேலத்துல பைனல் இயர் பி.எஸ்சி படிக்றா." - வாசு

"எப்படிடா பழக்கம்?" - ரத்னகுமார்

"அவன் தம்பிய நம்ம காலேஜ்ல சேத்தறதுக்கு முன்னால எங்க பெரியம்மாகிட்ட கேட்டிருக்காங்க, அப்ப செமஸ்டர் லீவுல நான் அங்க போயிருந்தேன். அவ தம்பி நம்ம காலேஜ்ல சேந்தப்றம் அங்க அடிக்கடி போக ஆரம்பிச்சேன். ஒருத்தருகொருத்தர் புடிச்சி போய் லவ் பண்ண ஆரம்பிச்சம்" - வாசு

"இப்ப என்ன திடீர்னு கல்யாணம். உங்க விஷயம் அவங்க வீட்ல தெரிஞ்சி போச்சா?" - ரத்னகுமார்

"ஆமா, அவங்க வீட்ல என்னைப் புடிக்கலை. அதனால வேற கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணிக்கிட்டு இருக்காங்க" - வாசு

"ஏன் புடிக்கல?" - ரத்னகுமார்

"எங்க அப்பா எங்கம்மாவ விட்டுட்டு என் சின்ன வயசுலயே ஓடிப்போயிட்டாரு. இதப்பத்தி விசாரிச்சி தெரிஞ்சிகிட்ட அவங்களுக்கு என்னைய மாப்ளயா ஏத்துக்க மனசு வரல"

"உங்கம்மா ஒத்துகிட்டாங்களா?" - ரத்னகுமார்

"எங்கம்மா ஒத்துக்கிட்டாங்க. அதுமட்டுமில்லாம எங்க சொந்த ஊர்ல எங்களுக்கு நாலஞ்சி வீடு இருக்கு அதுல வர்ற வாடகைய வச்சி எனக்கோ அவளுக்கோ வேலை கிடைக்கிற வரைக்கும் வாழ்க்கைய சிரமமில்லாம ஓட்டிடலாம்" - வாசு

"சரி. நாங்க என்ன பண்ணனுங்கிர?" - ரத்னகுமார்

"அவளை நான் மருதமலைல வச்சி தாலி கட்டி சொந்த ஊருக்கு கூட்டிப் போயிடலாம்னு இருக்கேன். அங்க யாரு வந்தாலும் நானும் என் லோக்கல் ப்ரண்ட்சும் சமாளிப்போம்" - வாசு

"சரி கவலையவிடு. சத்தமில்லாம இன்னும் ரெண்டே நாள்ல காரியத்த முடிச்சிடலாம். வேளச்சேரி விஜயன்னு என் பிரண்டு ஒருத்தர் இருக்கார் பெரிய தாதா. அவரை வேனும்னா துணைக்கு கூப்பிட்டுக்கலாம்" - விஸ்வா

"யாருமே வேணான்டா. நீங்க மட்டும் போதும், திட்டமெல்லாம் ரெடி. சுமோ வேனுக்கு கூட சொல்லிட்டேன். கல்யானம் முடியற வரைக்கும் நீங்க வந்தா போதும்" - வாசு

"ஓ.கே. டன். அப்ப நாளைக்கு பாப்பம்"

மறுநாள் சுமோவில் அனைவரும் பொள்ளாச்சிக்கு விரைந்தனர்.


நீங்க சொல்லுங்க

உலகே மாயம் வாழ்வே மாயம்

மறுநாள்

"என்னடா கதிர் இன்னிக்கு சொல்லப்போறியா?" - ரத்னகுமார்

"இல்லடா, இன்னும் கொஞ்ச நாள் வெயிட் பண்ணி சொல்லலாம்னு இருக்கேன். நீ வேற ஏன்டா நடுவுல பூந்து கொழப்பறே" - கதிர்

"நேத்து சும்மா வெளையாட்டுக்கு சொன்னேன்டா. ரெண்டுல ஒன்னு தெரிஞ்சிக்கலாம்னுதான்" - ரத்னகுமார்

"இன்னிக்கு நான் சொல்லலைன்னா நீ சொல்ல போறியாடா" - கதிர்

"நான் சொல்லலைடா, ஆனா கானா நேத்து போன வேகத்தப்பாத்தா இன்னிக்கு சொல்லிடுவான் போல இருக்குது. அவன் சொல்லி அத அவ சரின்னு ஒத்துக்கிட்டா அப்புறம் நீ தேவதாஸ் தான்" - ரத்னகுமார்

"நீ வேற ஏன்டா அவன பயமுறுத்தற, கதிர் நீ அவளை நிஜம்மாவே காதலிச்சா சொல்லிட வேண்டியதுதானடா" - விஸ்வா

"சொல்லத்தான்டா போறேன், ஆனா இன்னிக்கு இல்ல" - கதிர்

"சரி இன்னிக்கு வேணா. அப்ப எப்பத்தான் சொல்லப்போற" - விஸ்வா

"இன்னும் பத்து நாள்ல அவ பொறந்தநாள் வருது வர்ற அக்டோபர் பதினாறு அன்னிக்கு அவகிட்ட சொல்லிடலான்னு இருக்கேன்" - கதிர்

"சரி ஏதவது ஒரு நல்ல கிப்ட் கோல்ட் ரிங் மாத்ரி வாங்கி ப்ரசன்ட் பண்ணு" - விஸ்வா

"நல்ல ஐடியா. ரிங்கே ப்ரசன்ட் பண்ணலாம் அடுத்த வாரம் செலெக்ட் பண்ணும்போது என் கூட வா" - கதிர்

அப்போது முகத்தில் கலவரத்துடன் வாசு வந்தான்

"மச்சி! கானா வெசம் குடிச்சிட்டான்டா! அவன ராஜேந்தர் ஆட்டோல ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு போயிட்டான். நான் உங்களுக்கு சோல்லிட்டு கூட்டிட்டு போலாம்னு ஓடி வந்தேன்" - வாசு

அனைவரும் கானாவைப் பார்க்க விரைந்தார்கள்.

ஆஸ்பத்திரியில்..

அனைவரும் கானாவைப் பார்க்கச் செல்ல, கதிர் மட்டும் சீஃப் டாக்டரைப் பார்க்கப் போனான்.

"பொழச்சிக்குவானா டாக்டர்?" - கதிர்

"சரியான சமயத்துல கொண்டாந்து சேர்த்திருக்கீங்க. க்ரிடிக்கல் ஸ்டேஜைத் தாண்டிட்டான். கவலைப்படாதிங்க பொழைக்க வச்சிடலாம்" - டாக்டர்

சற்றே நிம்மதியானான் கதிர்

"என்னைய்யா ப்ரச்சனை அவனுக்கு? லவ்வா? இல்ல பரிட்சைல மார்க் வரலயா? இதெல்லாம் ஒரு ப்ரச்சனையா? இன்னும் வாழ்கைல எவ்வளவு ப்ரச்சனைய பாக்கவேண்டியிருக்கு, படிக்கும்போதே இப்படி பண்ணாக்க இவன்லாம் எப்படிய்யா வருங்காலத்துல வாழ்க்கைய ஓட்டப் போறான்?" - டாக்டர்

இதற்குள் ராஜேந்தரும் வாசுவும் அங்கே வந்தார்கள்.

எல்லாரும் சேர்ந்து டாக்டரின் அறையை விட்டு கானா படுத்திருந்த அறைக்கு வந்தார்கள். கானா மயக்கத்திலிருந்தான். அருகில் அவனையே பார்த்தபடி விஸ்வாவும் ரத்னகுமாரும் அமர்ந்திருந்தனர்

"என்னடா ராஜேந்தர் நடந்துச்சி ?" - விஸ்வா

"எனக்குத் தெரியலைடா, சாயந்தரம் காலேஜ்ல இருந்து வந்து பாத்தா ரூம்ல கானா வாய்ல நொரை தள்ளிப்போய் கீழ விழுந்து கெடந்தான், எனக்கு கை காலெல்லாம் வெடவெடன்னு ஆயிடுச்சி, ஒடனே ஆட்டோல தூக்கிபோட்டு இங்க கொண்டாந்து போட்டுட்டு வாசுக்கு போன் பண்ணி உங்கள கூட்டினு வரச்சொன்னேன்" - ராஜேந்தர்

இதற்குள் கானா கண்களை மெல்லத் திறந்தான். மெதுவாக சுற்றுப்புறத்தை உணர்ந்தவன் "என்னய ஏன்டா காப்பாத்துனீங்க" என்று சொல்ல நினைத்து முடியாமல் போனதால் பலமிழந்து அழ ஆரம்பித்தான். அவனைத் தேற்றிவிட்டு விஸ்வா, கதிர், ரத்னகுமார் மூவரும் ஆஸ்பத்திரியை விட்டு வீடு திரும்பினார்கள்.

மறுநாள் ஆஸ்பத்திரியில் கானா சற்று தெம்பாக இருந்தான். மாலை வீடு திரும்பலாம் என்று டாக்டர் கூறியிருந்தார். அன்று கதிர்,விஸ்வாவுடன் இன்னும் சில கல்லூரி நண்பர்களும் கானாவை வந்து பார்த்துப் பேசிவிட்டு சென்றனர். அனைவரும் சென்ற பிறகு விஸ்வாவும் கதிரும் கானாவிடம் என்ன நடந்தது என்று கேட்டான். சற்று நேரம் உடைந்து அழுத கானா மெதுவாக பேச ஆரம்பித்தான்.

"அன்னிக்கு ரத்னகுமார் சொன்னவுடனே ஒரு வெறியில் நேரா ஹொப் காலேஜான்ட இருக்குற கிஃப்ட் ஷாப்ல ஒரு கார்டு வாங்கி அதுல 'அழகே உன்னை ஆராதிக்கிறேன்'னு எழுதி ஒரு ரோஸ் வச்சி அவகிட்ட நேராப்போய் ஐ லவ் யூ சொன்னன்டா" - கானா

"அவ முடியாதுன்னு சொன்னாளா? அப்பிடி சொன்னா நீ உடனே இப்படி முட்டாள்த்தனமா பண்ணுவியா? போடங்கு!" - விஸ்வா

"அவ என்னை லவ் பண்லேன்னு சொல்லுவான்னு நான் எதிர் பாக்கலைடா. அது கூட பரவால்ல, எல்லார் முன்னாலையும் கூட்டி வச்சி என்னய பட்டிக்காட்டான், லூசு அது இதுன்னு அவமானப்படுத்திட்டா. அதுக்கப்றமும் உயிர் வாழனுமான்னுதான் அப்டி பண்ணிட்டேன்" - கானா

"சரி நடந்தது நடந்துபோச்சி, இனிமேயாவது இப்படியெல்லாம் பண்ணாம ஏதாவது வாழ்க்கையில பெரிசா சாதிக்கப் பாரு" - விஸ்வா

"என்னிய அவமானப்படுத்தினா இல்ல, இந்தப் குப்பத்து கானா எவ்வளவு பெரிய ஆளா வரமுடியும்னு அவளுக்கு செஞ்சி காட்ற வரை நான் ஓயமாட்டன்டா" - கானா

"தட்ஸ் குட்" - விஸ்வா

இந்த களெபரத்தில் சங்கீதாவின் பிறந்தநாளுக்கு கதிர் அவன் காதலைச் சொல்லலாம் என எடுத்திருந்த முடிவை விஸ்வாவும் ரத்னகுமாரும் மறந்தே விட்டார்கள்.

என்ன நடந்தாலும் தன் காதலை அவள் பிறந்தநாளன்று சொல்லிவிடுவதென்று தீர்மாணித்திருந்தான் கதிர், அவளுக்கு பரிசளிக்க ஒப்பனக்காரத் தெருவிலிருக்கும் நகைக்கடை ஒன்றில் ஏழு சிறு வைரக்கற்கள் பதித்த V வடிவிலான தங்க மோதிரமொன்றை வாங்கி வைத்தான்.

மறுநாள் சங்கீதாவிற்கு பிறந்தநாள். இரவு முழுதும் கதிருக்கு தூக்கம் வரவில்லை. நொடிக்கொருதரம் சாட்டின் ரிப்பனால் சுற்றி அழகாகன சிறு பெட்டியில் வைத்திருந்த மோதிரத்தை பார்த்துக்கொண்டிருந்தான்.


நீங்க சொல்லுங்க

ரெட்டைச்சூரியனும் ஒற்றைத்தாமரையும்

கல்லூரிப் பூங்காவில் தனியாக அமர்ந்து யோசித்துக்கொண்டிருந்த பைரவியின் அருகில் வந்து அமர்ந்தான் விஸ்வா.

"சாரி பைரவி. நான் மட்டும் உன்னை கதிர் கூட பாடச்சொல்லி கூப்பிடலைன்னா இந்த முறை நீ வழக்கம் பொல ஜெயிச்சிருப்பியில்ல?" - விஸ்வா

"ப்ச். அதனால என்ன பரவாயில்ல. அடுத்தவாட்டி பாத்துக்கலாம்" - பைரவி

"ரொம்ப சாரி" - விஸ்வா

"அத விடு. வேற எதாவது பேசலாம்" - பைரவி

கதிர் பத்தி நீ என்ன நெனக்கிற" - விஸ்வா

"அவனுக்கு நல்ல வாய்ஸ். எஸ்.பி.பி வாய்ஸும் ஜேசுதாஸ் வாய்ஸும் கலந்து வெச்ச மாத்ரி. ஒழுங்கா முறைப்படி கர்னாடிக் மியூசிக் கத்துகிட்டான்னா பெரிய ஆளா வரலாம்" - பைரவி

"உனக்கு தெரிஞ்ச கர்னாடிக் ம்யூசிக் டீச்சர் யாராவது இருந்தாக்க சொல்லேன். அவனைப்போய் கத்துக்கச் சொல்றன்" - விஸ்வா

"சாய்பாபா காலனில விஜயலக்ஷ்மின்னு ஒரு பாட்டு டீச்சர் இருக்காங்க அவங்களுக்கு கர்னாடிக், இந்துஸ்தானி எல்லாம் அத்துபடி. நான் கூட அவங்ககிட்டத்தான் ரெண்டு வருஷமா கத்துக்கறன். நீ வேனும்னா அவனை அங்க வந்து கத்துக்க சொல்லேன்" - பைரவி

"ஓ. அப்பசரி நான் நாளைக்கே அவங்களப்போய் பாக்கச்சொல்லி அவன் கிட்ட சொல்லிடறன்" - விஸ்வா

"குட். அப்றம், வேற எதாவது விஷயம் இருக்கா? நேரமாச்சி நான் வீட்டுக்கு போலாம்னு இருக்கேன்" - பைரவி

"சரி அப்ப கிளம்பு அப்றமா பாக்கலாம். பை" - விஸ்வா

"பை. பை" - பைரவி

மறுநாள் மாலை கல்லூரி முடிந்த பிறகு கல்லூரி காம்பவுன்ட் சுவரில் கதிர், விஸ்வா, ரத்னகுமார் மற்றும் நன்பர்களுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருகின்றனர்.

மாலை நேர ஜமாவில் புதிதாகச் சேர்ந்தவர்கள் வேலுச்சாமியும் அவன் நன்பர்கள் ராஜேந்தர் மற்றும் வாசு. இவர்கள் மூவரும் முந்தயநாள் பாட்டுப் போட்டியில் பழக்கமானவர்கள். மூவரும் ஒன்றாக தங்கி இருக்கிறார்கள்

"வருக வருக 'கானாக்குயில் குப்பத்துராஜா' அவர்களே. தங்கள் வரவு நல்வரவாகுக" - விஸ்வா

வேலுச்சாமி என்றால் கல்லூரியில் யாருக்கும் தெரியாது. கானாப் பாடல்களை நன்றாகப் பாடுவான் என்பதால் அவனுக்கு "கானாக்குயில் குப்பத்துராஜா" என்ற பட்டப்பேர் உண்டு. "கானா" என்று செல்லமாக அழைப்பார்கள்

"என்ன கானா, நேத்து பாட்டுப் போட்டியில ஒரே ரொமான்ஸ் மூட்ல இருந்த போல? புஷ்பவனம் குப்புசாமியோட 'ராசாத்தி ஒன்ன எண்ணி' பாட்டு ஜோரா இருந்திச்சி" - ரத்னகுமர்

"என்ன பண்ணி என்ன பிரியோஜனம், கதிர் ஒரு பழைய பாட்ட பாடி எல்லாரையும் கவுத்துட்டாரு. ஏதோ எனக்கு ப்ரைஸ் கிடைக்கலைன்னாலும் நம்ப ஆளுக்கு க்ரூப் சாங்க்ல பஸ்ட் ப்ரைஸ் கெடச்சிச்சே அதே ரொம்ப சந்தோஷமா இருக்கு" - கானா

"க்ரூப் சாங்க்ல யாரு பூரணியா,சரன்யாவா, இல்ல சங்கீதாவா?" - ரத்னகுமார்

"வேற யாரு சங்கீதாதான்" - ராஜேந்தர்

"என்ன மச்சி சொல்ற நீ சங்கீதாவ லவ் பன்றயா?" - விஸ்வா

"ஐயோடா. அத ஏன் கேக்ற. தெனமும் இவன் தூக்கத்துல ஒளர்ர ஒளரல் எல்லாம் நாங்க தான கேக்றம். எப்பப்பாரு சங்கீதா சங்கீதா சங்கீதாதான்" - வாசு

"நீ சொல்லு கானா, நிஜம்மா நீ சங்கீதாவ லவ் பன்றயா?" - விஸ்வா

"ஆமா விஸ்வா. நான் சங்கீதாவ ரொம்ப சின்சியரா லவ் பன்றன்" - கானா

கதிருக்கு மனதுக்குள் ஆயிரம் வாட்ஸ் மின்னல் ஒன்று பாய்ந்த மாதிரி அதிர்ச்சியாக இருந்தது

"அத அவ கிட்ட சொல்லிட்டியா கானா ?" - விஸ்வா

"இன்னும் இல்ல விஸ்வா, நானு ரெண்டரை வருஷமா நல்ல சமயம் பாத்து சொல்லலான்னு வெயிட் பன்றன், இன்னிக்கு வரைக்கும் சொல்ல முடியல" - கானா

"அது சரி, எப்ப சொல்றதா உத்தேசம் ?" - விஸ்வா

"நீங்கல்லாம் சேர்ந்துதான் எனக்கு இது விஷயமா ஹெல்ப் பண்ணனும்" - கானா

"சரி. நாம கொஞ்சம் வெளிப்படையா பேசறது நல்லது" - விஸ்வா

"வேணாம் விஸ்வா" என்று தடுக்க முயன்றான் கதிர்

"தடுக்காத கதிர், நாமல்லாம் இப்ப ஒத்துமயா இருக்கோம் நீங்க ரெண்டு பேரும் ஒரு போண்ணுக்கோசரம் சண்டை போடற நெலம வர வெணாம்" - விஸ்வா

"என்ன சொல்ற விஸ்வா? கதிரும் சங்கீதாவ லவ் பன்றானா?" - கானா

"ஆமா கானா. அவனும் ரெண்டரை வருஷமா அவளை லவ் பன்றான், உன்னப்போல அவ கிட்ட அவனும் இன்னும் சொல்லலை" -விஸ்வா

அதன் பின் சற்று நேரம் அங்கே மயான அமைதி நிலவியது

"எல்லாரும் அமைதியா இருந்தா எப்படி. இதுக்கு நான் ஒரு தீர்வு சொல்லவா? ரெண்டு பேரும் சங்கீதா கிட்ட போய் உங்க லவ்வப் பத்தி சொல்லுங்க. அவ யாருக்கு ஓ.கே சொல்றாளோ அவன் கன்டினிவ் பண்ணுங்க. இந்த சின்ன விஷயத்துக்காக நம்ம நட்புல விரிசல் வரக்கூடாது." - ரத்னகுமார்

"நீ சொல்ற மாதிரி அது அவ்ளவு சுலபமில்லடா. இவ்ளவு அவசரப்பட வேண்டாம்" - கதிர்

"இப்ப சொல்லாட்டி எப்ப சொல்லப்போறீங்க. இன்னம் 3 மாசத்துல நம்ம காலேஜ் லைபே முடிஞ்சிரும். முடிவாச்சொல்றேன் கேட்டுக்கங்க நாளைக்கு நீங்க ரெண்டு பேரும் அவ கிட்ட போய் உங்க லவ்வச் சொல்லலைன்னாக்க அப்றம் இந்த ரத்னகுமார் அவள கரைக்ட்டு பண்ணீட்டு பொயிகினே இருப்பான்" - ரத்னகுமார்

அத்தோடு அன்றைய மாலை ஜமா முடிந்தது.

இன்னார்க்கு இன்னார் என்று

கல்லூரிப் பூங்காவில் சங்கீதாவைக் கண்ட விஸ்வா அவளிடம், பாட்டுப் போட்டி பற்றி பேச ஆரம்பித்தான்.

"ஹாய் சங்கீ. ஆமா, வர்ற பாட்டுப் போட்டில பாடப் போறியா?" - விஸ்வா

"இல்ல. இந்த வாட்டி போட்டி பலமா இருக்கும் போல இருக்கு. அதனால கலந்துக்கறதா இல்ல" - சங்கீதா

"ஏய், கமான். உனக்கு நல்ல வாய்ஸ் இருக்கு. க்ரூப் சாங்ல நம்ம கதிர் கூட பம்பாய் பட்த்துல வர்ற 'உயிரே' பாட்டு பாட்றான், பீமேல் சிங்கர் தான் இன்னும் செட் ஆவலை. நீ அவனோட சேந்து பாடலாம்ல ?" - விஸ்வா

"நான் சோலோ மட்டும் கலந்துக்கலாம்னு இருந்தேன். புன்னகை மன்னன்ல இருந்து 'வான் மேகம்' பாட்டு பாடலாம்னு"- சங்கீதா

"பரவாயில்ல. அவன் கூட சேந்து 'உயிரே' பாட்டும் பாடலாம். ஜெயிச்சா ப்ரைஸ் மணிய ரெண்டு பேரும் ஷேர் பண்ணிக்கங்க" - விஸ்வா

"ஓ.கே. பட் ஒன் கண்டிஷன். நான் 'கடலோரக் கவிதைகள்' படத்துல வர்ற 'அடி ஆத்தாடி' பாட்டுன்னா கதிர் கூட பாடுறன்" - சங்கீதா

"அதெல்லாம் முடியாது. 'உயிரே' பாட்டுதான்னு முடிவு பண்ணியாச்சி. உன்னால முடியாதுன்னா சொல்லு. நான் வேற யாரயாவது கேட்டுக்றேன்" - விஸ்வா

சங்கீதா "நான் இஷ்டப்பட்ட பாட்டுன்னா பாடுறன். இல்லன்னா முடியாது" என்றாள் பிடிவாதமாக

விஸ்வா ஏமாற்றத்துடன் திரும்பி நடந்து வந்த போது ரத்னகுமாரும் கதிரும் வந்தார்கள்

"என்னடா, கதிர் கூட பாடுறாளாமா ?" - ரத்னகுமார்

"கேட்டன்டா, 'உயிரே' பாட்டு பாடமாட்டாளாம். வேற பாட்டுன்னா பாடுறாளாம்" - விஸ்வா

"என்ன பாட்டுன்னாலும் சரிடா. நான் அவ கூட பாடனும் அவ்ளோதான்" - கதிர்

"போடாங்கு. இப்ப உன் கூட பாடறதுக்கே கண்டிஷன் போட்டா அப்றம் எப்படிடா லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கப்போற" - ரத்னகுமார்

"எல்லாத்லயும் வுட்டு குடுத்து போனா ஒன்னும் ப்ரச்சனை வராதுரா" - கதிர்

"எல்லாம் சரி. இப்ப பாட்டுப் போட்டில சோலோ, க்ரூப் சாங் ரெண்டுலயும் உன் பேர் குடுத்தாச்சி. யாரயாவது க்ரூப் சாங்குக்கு பாட வெச்சே ஆவனும்" - ரத்னகுமார்

"டேய். ஐடியா. செகண்ட் இயர் பைரவியக் கேக்றன். அவ ஒத்துக்கிட்டா ப்ரச்சனை தீந்தது" - விஸ்வா

அரைமணி நேரம் கழித்து வந்தான் விஸ்வா, பைரவியுடன். அங்கேயே பாட்டுப் பயிற்சியை ஆரம்பித்தனர்.

பாடி முடித்ததும்-

"டே கதிர், எல்லாம் நல்லாத்தான் பாடுற. ஆனா பாடும்போது கைய வச்சிகிட்டு சும்மா இருக்காம தலய எதுக்கு சொறியர?" - ரத்னகுமார்

"ரம்ப கஷ்டப்பட்டு பேசி பைரவியக் கூட்டினு வந்துருக்கண்டா. இது வரக்கும் அவ எந்த பாட்டுப்போட்டிலயும் தோத்ததில்ல. அதுமட்டுமில்ல க்ரூப் சாங்ல லேடிஸ் மட்டும் இல்லன்னா ஜெண்ட்ஸ் மட்டும் சேந்து பாடத்தான் அலோடுன்னு உனக்கே தெரியும். உன் கூட சேந்து பாடினா சஸ்பெண்ட் பண்ணிடுவாங்கன்னு தெரிஞ்சும் எனக்காக சரின்னு சொல்லியிருக்கா கவுத்துறாதடா. " - விஸ்வா

"அதெல்லாம் கவலப்படாதிங்கடா. கலக்கிடலாம்" - கதிர்

பாட்டுப்போட்டி நடைபெறும் நேரம் வந்தது. அனைவரும் அரங்கத்தில் கூடி இருந்தனர்

அறிவிப்பாளர் ஒவ்வோருவர் பெயராக அறிவிக்க, சோலோ போட்டி ஆரம்பித்தது.

சங்கீதாவின் பெயர் அறிவிக்கப் பட்டதும் மேடை ஏறி சிப்பிக்குள் முத்து படத்தில் வரும் 'லாலி லாலி' பாட்டு பாடினாள்

கதிர் சோலோவில் 'காலங்களில் அவள் வசந்தம்' பாடினான்

அடுத்ததாக க்ரூப் சாங் போட்டி ஆரம்பித்தது.

சங்கீதாவின் குழு மைக்கேல் ஜாக்சனின் 'ஹீல் த வோல்ட்' பாடினார்கள். விஸ்வாவின் மனதுக்குள் சங்கீதா ஏன் பொய் சொன்னாள் என்ற எண்ணம் ஓடியது

கதிரின் முறையும் வந்தது.

"அடுத்து வருபவர் பைரவி கதிர்" - அறிவிப்பாளர் அனைவரும் ஆச்சர்யமாகப்பார்த்தனர்

தவற்றை உணர்ந்த அறிவிப்பாளர் மீண்டும் அறிவித்தார் "அடுத்து வருபவர் பைரவி மற்றும் கதிர்".

ஆணும் பெண்ணும் சேந்து பாடினா சஸ்பெண்ட் பண்ணிடுவாங்கன்னு தெரிஞ்சும் பாட வந்து இருக்காங்க என்று கூட்டத்தில் சில பேர் கிசுகிசுத்தனர்.

இருவரும் மேடை ஏறி பாடி முடித்தனர். தொடர்ந்து இன்னும் சிலரும் பாடி முடித்தனர்.

முடிவுகள் அறிவிக்கப்பட்டது. சோலோவில் கதிர் வெற்றி பெற்றான். க்ரூப் சாங்கில் சங்கீதாவின் குழு வெற்றி பெற்றது.

பைரவி தோல்வியை ஏற்று சிறு புன்னகை தவழ அரங்கை விட்டு வெளியேறினாள்.

அவளை சமாதானப்படுத்த விரைந்த விஸ்வாவின் மனதில் சங்கீதாவின் பொய்யும் அறிவிப்பாளர் கதிரையும் பைரவியையும் அறிவித்த விதமும் மாறி மாறி வந்தது.

அந்த நாள் ஞாபகம்

"இது யாருடா? திரும்பவுப் லவ்வா ?" என்றான் விஸ்வபரதி

"சேச்சே! ப்ரெண்டுடா, பேரு நித்யா. இன்ஸ்டியூட்ல டைரக்ஷன் படிக்கிறா. ஓ! உனக்கு தெரியாதில்ல, நான் இப்ப சினிமெட்டோ கிராப்பி பண்றன்டா" - கதிர்

"அதானே பார்த்தேன், எங்கடா சங்கீதா விஷயத்தில பட்ட காயத்தை அதுக்குள்ள மறந்துட்டியோன்னு நெனச்சேன்" - விஸ்வபரதி

"அது யாரு சங்கீதா?" - நித்யா

"அது ஒரு பெரிய கதை. அப்ப நாங்க ஆர்ட்ஸ் காலேஜ்ல படிச்சிக்கிட்டிருந்தோம்" - கதிர்வேல்

(ப்ளாஷ்பேக் - அவரவர் வசதிப்படி கொசுவத்தி சுருளை உருட்டலாம், ட்ரொய்ய்ய்ய்ய்ங் சவுண்ட் கொடுத்துக்கலாம் அல்லது வேறேதேனும் கிராபிக்ஸ் எபெக்ட் கொடுக்கலாம்)

கலைக்கல்லூரியில் ஒரு நாள் -

"வாடா ரத்னகுமார். எப்படி போச்சி செமஸ்டர் லீவெல்லாம் ?" - கதிர்

"செம மஜா! மூனு வாட்டி வெத்தலை போட்டேன் - காஞ்சிப்போன வெத்தலை தான் ஆனா ஓ.கே"
(ரத்னகுமார் கஞ்சாவை வெத்தலை என சொல்வான்)

"திருந்தவே மாட்டியாடா?" - கதிர்

"என்னத்துக்கு அவன் திருந்தனும்? அவன் கெட்டாத்தானே திருந்தறதுக்கு. இப்ப, நீயே ஒரு பெரிய பிசினஸ்மேன் ஆவுறன்னு வெச்சிக்க, ஒரு தண்ணி பார்ட்டிக்கி இல்லன்னா மஜா பார்ட்டிக்கி பொவுறன்னு வெச்சிக்க அங்க தண்ணி அடிச்சா தள்ளாடாம இருக்கனும்ல, அதுக்கு தான் இப்ப இருந்தே எல்லா கிக்கும் மேனேஜ் பண்றதுக்கு ப்ராக்டிஸ் எடுத்துக்கன்னு சொல்றேன்" - விஸ்வபாரதி

"இப்படி சொல்லிச் சொல்லித்தான் தம்மு, பீரு அப்றம் ஹாட் எல்லாம் அடிச்சம். போதும்டா. எந்த ஹைக்கிளாஸ் பார்ட்டியிலயும் கஞ்சால்லாம் அடிக்க வேண்டி வராது" - கதிர்

"ஓ.கே அவனவனுக்கு எப்ப எதச் செய்யனும் எத நிறுத்தனும்னு தெரியும். இதுல தலையிடாத" - விஸ்வபாரதி

"ஏதோ நல்ல புத்தி சொல்றேன். அப்றம் உன் இஷ்டம்டா ரத்னா" - கதிர்

"டேய் அதெல்லாம் விடு. 2 வருஷமா நீயும் சங்கீதாவும் ஒருத்தர ஒருத்தர் பார்த்துக்றீங்க, கண்ணால பேசிக்றீங்க. உன் லவ்வை எப்பச் சொல்றதா உத்தேசம் ?" - ரத்னகுமார்

"காலேஜ் கல்சுரல் செக்ரேட்டரி எலக்சன் வருதில்ல. அதுல நின்னு ஜெயிச்சப்றம் சொல்லலாம்னு இருக்கேன்" - கதிர்

"டேய் உன்ன எதுத்து நிக்கிற அர்ஜுன்க்கு ஸ்டுடண்ட்ஸ் கிட்ட பவர் ஜாஸ்திடா. எப்படி ஜெயிக்கப் போற" - ரத்னகுமார்

"நமக்கும் ஓரளவுக்கு சப்போர்ட் இருக்குடா. அது போக நடுநிலையா இருக்கிற ஸ்டுடண்ட்ஸ் கிட்ட பேசி எப்படியாவது உள்ளாற விளையாடியாவது உன்னய ஜெயிக்க வக்கிறன்டா கதிரு" - விஸ்வா

"கல்சுரல் செக்ரேட்டரியா ஆவறது மட்டுமில்லடா. வர்ற பாட்டுப் போட்டியில சங்கீதாவோட சேர்ந்து பம்பாய் படத்துல வர்ற "உயிரே..." பாட்டு பாடனும்" - கதிர்

"தம்பி! பொண்னோட சேந்து பாடினா சஸ்பெண்ட் பண்ணிருவாங்கப்பா!" - ரத்னகுமார்

"அதப்பத்தி எல்லாம் கவலைப்படாதேடா. எப்படியாவது உன்னோட இந்த ஆசையையும் நிறைவேத்த வழி பாக்கலாம். ஆனா ஒன்னுடா உன் காதல் உண்மையானதுன்னா கண்டிப்பா கல்யாணத்துல முடியும். இல்லன்னா இப்ப நாம பண்ற அத்தனையும் வேஸ்ட்" - விஸ்வா

"கண்டிப்பா நான் ஜெயிப்பன்டா. எலக்சன்லயும்... காதல்லயும்......"

ஒரு வாரம் ஓடியது. கதிருக்காக எல்லாரிடமும் விஸ்வாவும் நன்பர்களும் பேசி ஓட்டு சேகரித்தார்கள்

எலக்ஷன் முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டது

அர்ஜுன் எதிர்பாரா விதமாகத் தோற்றுப் போயிருந்தான். கதிர் தன் நன்பர்களுடன் வெற்றிக்களிப்பில் மூழ்கிக் காணாமலே போனான்.

கல்லூரியின் பாட்டுப்ப்போட்டி அறிவிப்பும் வந்தது. மூன்றே நாட்கள் இருந்தது.