சூரியனை மறைக்கும் மேக மூட்டத்துடன் ரம்யமான சூழல் நிலவியது. சாலையின் இரு புறங்களிலும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பசுமையான நிலப்பரப்பு. பொள்ளாச்சி வரை பயணம் செய்ததாகவே தெரியவில்லை அவர்களுக்கு.
பொள்ளாச்சியை அடைந்தவுடன் வாசு மட்டும் இறங்கி, அவன் காதலியை கூட்டிவரப் போக, அவர்களனைவரும் வண்டியிலேயே காத்திருக்க ஆரம்பித்தனர். அரைமணி நேரம் தவிப்பாய் கழிந்தது.
தூரத்தில் வாசு மட்டும் வந்து கொண்டிருந்தான். அவன் கையில் ஒரு பெட்டி இருந்தது. வண்டிக்கு வந்தபின் "வண்டிய எடுங்கடா! போகலாம், போற வழில அவ ஏறிப்பா" என்றான்.
அவன் சொன்னபடி வண்டி கிளம்பிய சிறிது நேரத்திலேயே வேகமாய் ஓடி வந்து அவன் காதலி ஏறிக் கொண்டாள்.
மீண்டும் கோவை நோக்கிப் பயணித்தார்கள்.
மருதமலையை அடைந்த பின் ஏற்கனவே சொல்லி வைத்தது போல எல்லாம் தயாராய் இருந்தது. வாசு தாலியை கட்ட, நண்பர்கள் முன்னிலையில் நல்லபடியாக அவர்கள் திருமணம் முடிந்தது.
வாசு இதற்காக வெகுநாள் திட்டமிட்டிருப்பான் போல.. பதிவாளர் அலுவலகத்திலும் எல்லாம் தயாராய் இருந்தது. கதிர்,ரத்னகுமார், விஸ்வா, கானா ஆகியோர் சாட்சி கையெழுத்திட, அங்கேயும் எல்லாம் நல்லபடியாக முடிந்தது
மேற்கொண்டு ஆக வேண்டிய அனைத்தையும் கவனித்துவிட்டு திரும்பிய போது இரவு வெகுநேரம் ஆகிவிட்டிருந்தது.
மறுநாள் வாசுவைத் தவிர எல்லோரும் கல்லூரிக்கு சென்றனர். வாசுவின் மனைவியின் தம்பி பாபு அன்று கல்லூரிக்கு வரவில்லை.
அன்று மாலை வாசுவின் மாமனார் மற்றும் சிலருடன் பேச்சு வார்த்தை நடந்தது. கடைசியில் சமாதானமாகி, வாசுவின் குடும்பத்துடன் அவனது மாமனார் குடும்பம் சுமுகமாகிப் போனது. அதன் அடையாளமாக அடுத்த நாள் பொள்ளாச்சியில் ரிசெப்ஷன் வைப்பதற்கான ஏற்பாடுகளை கவனித்தார் அவர்.
இத்தனை கலாட்டாவில் பாபுவை எங்குமே காணவில்லை.
இந்த வெற்றியை கொண்டாடவும் வாசுவின் தேனிலவுக்கு ஏற்பாடுகளை கவனிக்கவும் வீஸ்வா, ரத்னகுமார், கானா மற்றும் சிலருடன் ஊட்டிக்கு சென்றனர். சொந்த வேலையிருந்ததால் கதிர் மட்டும் விஸ்வாவின் அறையிலே தங்கினான்.
வேலையை முடித்துவிட்டு அறைக்கு திரும்பிய கதிர், சாப்பிட்டுவிட்டு புத்தகம் படித்துக்கொண்டிருந்தான். இரவு சுமார் ஒன்பது மணியிருக்கும், திடீரென்று அறைக்கதவை உடைத்துக்கொண்டு ஏழெட்டு பேர் கூச்சலிட்டபடி கதிர் மீது பாய்ந்தனர்.
இதைச் சற்றும் எதிர்பாராத கதிர் சுதாரித்துக் கொண்டு முடிந்தவரை போராடினான். இருட்டாயிருந்ததால் சரியாக உருவங்களை அடையாளம் தெரியவில்லை. "எங்கக்கா வாழ்க்கைய கெடுத்திட்டீங்களேடா" என்றபடி பாய்ந்த உருவத்தையும் குரலையும் அடையாளம் காண யோசித்த கதிரின் வயிற்றில் கூரிய கத்தியை இறக்கிவிட்டு ஓடினான் பாபு.
கதிருக்கு கண்களில் இருள் கவ்வியது. பக்கத்து வீட்டின் கதவு வரை தரையோடு தரையாக உடலை தேய்த்துக் கொண்டு வந்தவன் கதவை பலம் கொண்ட மட்டும் தட்டிவிட்டு சரிந்து விழுந்தான். கதவை திறந்த பக்கத்து வீட்டுக்காரர் அதிர்ந்துபோய் அவனை தூக்கிக் காரில் போட்டு மருத்துவமனைக்கு விரைந்தார்.
கண் விழித்துப் பார்த்தான் கதிர். கவலையோடு சுற்றியமர்ந்திருந்த விஸ்வாவும் ரத்னகுமாரும் சற்றே நிம்மதியுடன் புன்னகைத்தனர்.
"நீ இங்க வந்து ரெண்டு நாளாச்சிரா கதிர். எங்க பக்கத்து வீட்டுக்காரர் தான் உன்னை இங்க சேர்த்திருக்கார். இல்லன்னா இன்னேரம் உன்னை உயிரோடவே பாத்திருக்க முடியாது. நல்லவேளை இந்த ஆஸ்பிட்டல் டாக்டரை அவருக்கு தெரியும், அதனால விஷயம் போலீஸ் கேஸாகலை. யார் உன்னை கத்தியால குத்தினது தெரியுமா? வாசுவோட மச்சான் பாபுடா" - விஸ்வா
தெரியும் என்பது போலத் தலையசைத்தான் கதிர்.
"அவனுக்கு எங்க வீட்டை தெரியாதுடா. வாசுதான் ஓளறியிருக்கான். நம்ம எல்லாரையும் தீர்த்துகட்டிடலாம்னு ஆளுங்கள கூட்டி வந்திருக்கான் பாபு. நீ மட்டும் மாட்டிகிட்ட" - விஸ்வா
வேதனையாய் புன்னகைத்தான் கதிர். எழுந்து உட்கார முயன்றவனின் அடிவயிற்றில் தையல் வலித்தது.
"இந்த ரெண்டு நாள்ல விஷயம் ரொம்ப பெரிசாயிடுச்சி. நான் அடிக்கடி சொல்வேனே 'வேளச்சேரி விஜயன்' இவர்தான். இவரை வரச்சொல்லி அத்தனை பேரையும் சமாளிச்சோம்"
விஸ்வா காட்டிய இடத்தில் ஆறடி உயரத்தில் (மூன்றடி அகலத்தில்) தடித்த உருவத்துடன் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.
"பாபுவை கொல்லனும்டா விஸ்வா" மெதுவாய் பேசிய கதிரின் முகத்தில் கோபம் இருந்தது
"வேனாம் தம்பி, நான் சொல்லுறத கேளுங்க, இனிமே அவன் உங்க கிட்ட வாலாட்ட மாட்டான். நான் இங்க லோக்கல் ரவுடிங்க கிட்ட பேசிட்டேன். படிக்கிற காலத்துல இந்த மாறி ஒருத்தர ஒருத்தர் அடிச்சிகிட்டீங்கன்னா அப்றம் வாழ்க்கை தடம் மாறிடும். நான் கூட படிச்சவன். கடைசி வருஷம் ஒரு சின்ன தகறாரில ஒருத்தன் கைய வெட்டிட்டேன். அப்ப ஆரம்பிச்சி இப்பவரைக்கும் நார்மல் வாழ்க்கைக்கு திரும்ப முடியல" என்றார் வேளச்சேரி விஜயன்
இரண்டு நாட்களுக்கு பின் சற்றே தேறிய கதிர் கல்லூரிக்கு செல்ல ஆரம்பித்தான்.
கத்தி குத்துபட்டு கதிர் மருத்துவமனையிலிருந்த போது அவனைப் பார்க்க சங்கீதா ஏன் வரவில்லை எனத் தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தான் ரத்னகுமார்.
மணிக்கு Ranjan சொன்னது...
இந்த கதை என்க்கு தெரியவே தெரியாது. யாரும் சொல்லவே இல்ல.
கதை நல்ல போகுது..விறு விறுப்பா இருக்கு.
மணிக்கு கோபி சொன்னது...
அடுத்த பதிப்பிற்கு ஆகும் தாமதத்திற்கு மன்னிக்கவும். அலுவலக வேலைகள் ஆளைக் கொல்லுமளவு வளர்ந்து விட்டது. விரைவில் அடுத்த பகுதியை பதிக்கிறேன்
நீங்க சொல்லுங்க
மடை திறந்து பாடும் நதியலை
முன்தினம் குறைவாகத் தூங்கிய சுவடே இல்லாமல் உற்சாகமாய் இருந்தான் கதிர். மோதிரத்தின் சாட்டின் பேக்கிங்கின் மேல் திருப்தியில்லாமல் ஒரு கேட்பரிஸ் எக்லேர்ஸ் சாக்லேட்டிற்க்கு சூட்டி மீண்டும் அழகாக பேக் செய்தான். அத்தோடு ஒரு மினி கார்ட் வைத்து "For the one with sweetest heart" என்று எழுதி கையெழுத்திட்டான். திருப்தியடைந்தவன் கல்லூரிக்கு சென்றான்.
அன்று முழுவதும் ஏனோ சங்கீதாவைக் காணவில்லை.
மாலையில் ஏமாற்றத்தோடு வீடு திரும்ப நினைத்தவன் கல்லூரி வாசலருகே புன்னை மரத்தடியில் நின்றிருந்த சங்கீதாவைப் பார்த்தவுடன் குஷியானான்.
ஓட்டமும் நடையுமாக அவளிடம் சென்ற அவன் மூச்சு வாங்க "சங்கீதா! உன்னைய... எங்கல்லாம... தேடறது..., ஹாப்பி பர்த்டே. இந்தா... உனக்கு ஒரு... சின்ன சர்ப்ரைஸ்" என்றான்
"தாங்ஸ். இந்தாங்க ஸ்வீட். என்ன அது?" என்றபடி அவனிடமிருந்து வாங்கிப் பிரித்தாள்.
சாக்லேட்டை சுற்றியணைத்தபடி இருந்த மோதிரத்தைப் பார்த்த சங்கீதாவின் கண்கள் பிரகாசித்தன.
"ரொம்ப நாளா எப்படிச் சொல்றதுன்னு தவிச்சிக்கிட்டு இருந்தேன்" என்ற கதிரை என்ன என்பது போல பார்த்தாள்.
"நான் உன்னை சின்சியரா லவ் பண்றேன் சங்கீ. நீ என்னை லவ் பண்றயா?" என்றான் கதிர்.
மோதிரத்தைப் பார்த்துக்கொண்டிருந்தவள் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். மெலிதாகப் புன்னகைத்தவள் பஸ் வருவதைப் பார்த்தவுடன் பதிலேதும் சொல்லாமல் ஓடினாள்.
பின்னாலேயே "இப்படி பதில் சொல்லாம ஓடினா எப்படி. ஸே எஸ் ஆர் நோ!" என்று கத்தியபடி ஓடினான் கதிர். பஸ்ஸில் ஏறிய சங்கீதா அவனைத் திரும்பிப் பார்த்து தலையையும் கையையும் அசைத்தாள். கைகளில் சற்று முன் கதிர் அளித்த மோதிரம் இருந்தது.
மறுநாள் மாலை, நடந்ததை விஸ்வாவுக்கும் ரத்னகுமாருக்கும் உற்சாகமாக விவரித்துக் கொண்டிருந்தான் கதிர். தூரத்தில் கானா, வாசு, ராஜேந்தர் வருவதைப் பார்த்தவுடன் அனைவரும் அமைதியானார்கள்.
கானா நேராய் வந்து கதிருடன் கைகுலுக்கினான். "சங்கீதா உன்னைய லவ் பண்றாலாமே! கங்கிராட்ஸ்டா"
"சேச்சே! யாருடா சொன்னது உனக்கு." - கதிர்
"நேத்திக்கு நீ அவளுக்கு மோதிரம் குடுத்தது, அவ உன் காதலுக்கு ஓ.கே சொன்னது, இப்ப அத நீ என்கிட்ட சொன்னா நான் வருத்தப்படுவேன்னு மறைக்கிறது, எல்லாந் தெரியுன்டா எனக்கு" - கானா
கதிருக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.
"நீ நெனைக்கிற மாதிரி எனக்கொன்னும் வருத்தமில்ல. அவ என்னை அவமானப்படுத்தினப்பவே அவளை மறந்துட்டேன்."
- கானா
எல்லோரும் கானாவைக் அமைதியாகப் பார்த்தார்கள்
"இப்பகூட அவ உனக்கு காதலியா இருக்கலாம் எனக்கு எப்பவுமே அவ எதிரி தான். ஒரு நாள் நான் பெரிய ஆளா வருவேன் அப்ப அவளுக்கு தெரியும் இந்த கானா யாருன்னு" - கானா
"மச்சி! உங்க பஞ்சாயத்த அப்றம் வச்சிக்கங்க. எனக்கு இப்ப அவசர உதவி ஒன்னு தேவைப்படுது" -வாசு
"என்னடா. உனக்கும் லவ்வா?" என்றான் விஸ்வா கிண்டலாக
"ஆமா. ஆனா நான் ஒரு வருஷம் முன்னாலயே ஆரம்பிச்சிட்டேன். இப்ப அவ வீட்ல அவளுக்கு அவசரமா கல்யாணம் பண்ணப் பாக்றாங்க" - வாசு
"பொண்ணு யாருடா வாசு?" - ரத்னகுமார்
"நம்ம காலேஜ் இல்லடா. பொள்ளாச்சியில எங்க பெரியம்மா வீட்டுக்கு பக்கத்து வீடு. அவங்க தம்பி பாபு, நம்ம காலேஜ்ல தான் பஸ்ட் இயர் படிக்றான் இவ சேலத்துல பைனல் இயர் பி.எஸ்சி படிக்றா." - வாசு
"எப்படிடா பழக்கம்?" - ரத்னகுமார்
"அவன் தம்பிய நம்ம காலேஜ்ல சேத்தறதுக்கு முன்னால எங்க பெரியம்மாகிட்ட கேட்டிருக்காங்க, அப்ப செமஸ்டர் லீவுல நான் அங்க போயிருந்தேன். அவ தம்பி நம்ம காலேஜ்ல சேந்தப்றம் அங்க அடிக்கடி போக ஆரம்பிச்சேன். ஒருத்தருகொருத்தர் புடிச்சி போய் லவ் பண்ண ஆரம்பிச்சம்" - வாசு
"இப்ப என்ன திடீர்னு கல்யாணம். உங்க விஷயம் அவங்க வீட்ல தெரிஞ்சி போச்சா?" - ரத்னகுமார்
"ஆமா, அவங்க வீட்ல என்னைப் புடிக்கலை. அதனால வேற கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணிக்கிட்டு இருக்காங்க" - வாசு
"ஏன் புடிக்கல?" - ரத்னகுமார்
"எங்க அப்பா எங்கம்மாவ விட்டுட்டு என் சின்ன வயசுலயே ஓடிப்போயிட்டாரு. இதப்பத்தி விசாரிச்சி தெரிஞ்சிகிட்ட அவங்களுக்கு என்னைய மாப்ளயா ஏத்துக்க மனசு வரல"
"உங்கம்மா ஒத்துகிட்டாங்களா?" - ரத்னகுமார்
"எங்கம்மா ஒத்துக்கிட்டாங்க. அதுமட்டுமில்லாம எங்க சொந்த ஊர்ல எங்களுக்கு நாலஞ்சி வீடு இருக்கு அதுல வர்ற வாடகைய வச்சி எனக்கோ அவளுக்கோ வேலை கிடைக்கிற வரைக்கும் வாழ்க்கைய சிரமமில்லாம ஓட்டிடலாம்" - வாசு
"சரி. நாங்க என்ன பண்ணனுங்கிர?" - ரத்னகுமார்
"அவளை நான் மருதமலைல வச்சி தாலி கட்டி சொந்த ஊருக்கு கூட்டிப் போயிடலாம்னு இருக்கேன். அங்க யாரு வந்தாலும் நானும் என் லோக்கல் ப்ரண்ட்சும் சமாளிப்போம்" - வாசு
"சரி கவலையவிடு. சத்தமில்லாம இன்னும் ரெண்டே நாள்ல காரியத்த முடிச்சிடலாம். வேளச்சேரி விஜயன்னு என் பிரண்டு ஒருத்தர் இருக்கார் பெரிய தாதா. அவரை வேனும்னா துணைக்கு கூப்பிட்டுக்கலாம்" - விஸ்வா
"யாருமே வேணான்டா. நீங்க மட்டும் போதும், திட்டமெல்லாம் ரெடி. சுமோ வேனுக்கு கூட சொல்லிட்டேன். கல்யானம் முடியற வரைக்கும் நீங்க வந்தா போதும்" - வாசு
"ஓ.கே. டன். அப்ப நாளைக்கு பாப்பம்"
மறுநாள் சுமோவில் அனைவரும் பொள்ளாச்சிக்கு விரைந்தனர்.
கதைத்தது தகடூர் கோபி(Gopi) நேரம் 11:45 AM 1 கருத்து(க்கள்) சொல்லுங்க
மணிக்கு கோபி சொன்னது...
(குணா ஸ்டைலில் படிக்கவும்)
இந்தக் கதைய நெனச்சிப் பாக்குறப்போ... மனசுல வார்த்தை அருவி மாதிரி கொட்டுது ஆனா அதை எழுதனும்னு நெனக்குறப்போ... நேரம் கெடைக்க மாட்டேங்குது
நீங்க சொல்லுங்க
உலகே மாயம் வாழ்வே மாயம்
"என்னடா கதிர் இன்னிக்கு சொல்லப்போறியா?" - ரத்னகுமார்
"இல்லடா, இன்னும் கொஞ்ச நாள் வெயிட் பண்ணி சொல்லலாம்னு இருக்கேன். நீ வேற ஏன்டா நடுவுல பூந்து கொழப்பறே" - கதிர்
"நேத்து சும்மா வெளையாட்டுக்கு சொன்னேன்டா. ரெண்டுல ஒன்னு தெரிஞ்சிக்கலாம்னுதான்" - ரத்னகுமார்
"இன்னிக்கு நான் சொல்லலைன்னா நீ சொல்ல போறியாடா" - கதிர்
"நான் சொல்லலைடா, ஆனா கானா நேத்து போன வேகத்தப்பாத்தா இன்னிக்கு சொல்லிடுவான் போல இருக்குது. அவன் சொல்லி அத அவ சரின்னு ஒத்துக்கிட்டா அப்புறம் நீ தேவதாஸ் தான்" - ரத்னகுமார்
"நீ வேற ஏன்டா அவன பயமுறுத்தற, கதிர் நீ அவளை நிஜம்மாவே காதலிச்சா சொல்லிட வேண்டியதுதானடா" - விஸ்வா
"சொல்லத்தான்டா போறேன், ஆனா இன்னிக்கு இல்ல" - கதிர்
"சரி இன்னிக்கு வேணா. அப்ப எப்பத்தான் சொல்லப்போற" - விஸ்வா
"இன்னும் பத்து நாள்ல அவ பொறந்தநாள் வருது வர்ற அக்டோபர் பதினாறு அன்னிக்கு அவகிட்ட சொல்லிடலான்னு இருக்கேன்" - கதிர்
"சரி ஏதவது ஒரு நல்ல கிப்ட் கோல்ட் ரிங் மாத்ரி வாங்கி ப்ரசன்ட் பண்ணு" - விஸ்வா
"நல்ல ஐடியா. ரிங்கே ப்ரசன்ட் பண்ணலாம் அடுத்த வாரம் செலெக்ட் பண்ணும்போது என் கூட வா" - கதிர்
அப்போது முகத்தில் கலவரத்துடன் வாசு வந்தான்
"மச்சி! கானா வெசம் குடிச்சிட்டான்டா! அவன ராஜேந்தர் ஆட்டோல ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு போயிட்டான். நான் உங்களுக்கு சோல்லிட்டு கூட்டிட்டு போலாம்னு ஓடி வந்தேன்" - வாசு
அனைவரும் கானாவைப் பார்க்க விரைந்தார்கள்.
ஆஸ்பத்திரியில்..
அனைவரும் கானாவைப் பார்க்கச் செல்ல, கதிர் மட்டும் சீஃப் டாக்டரைப் பார்க்கப் போனான்.
"பொழச்சிக்குவானா டாக்டர்?" - கதிர்
"சரியான சமயத்துல கொண்டாந்து சேர்த்திருக்கீங்க. க்ரிடிக்கல் ஸ்டேஜைத் தாண்டிட்டான். கவலைப்படாதிங்க பொழைக்க வச்சிடலாம்" - டாக்டர்
சற்றே நிம்மதியானான் கதிர்
"என்னைய்யா ப்ரச்சனை அவனுக்கு? லவ்வா? இல்ல பரிட்சைல மார்க் வரலயா? இதெல்லாம் ஒரு ப்ரச்சனையா? இன்னும் வாழ்கைல எவ்வளவு ப்ரச்சனைய பாக்கவேண்டியிருக்கு, படிக்கும்போதே இப்படி பண்ணாக்க இவன்லாம் எப்படிய்யா வருங்காலத்துல வாழ்க்கைய ஓட்டப் போறான்?" - டாக்டர்
இதற்குள் ராஜேந்தரும் வாசுவும் அங்கே வந்தார்கள்.
எல்லாரும் சேர்ந்து டாக்டரின் அறையை விட்டு கானா படுத்திருந்த அறைக்கு வந்தார்கள். கானா மயக்கத்திலிருந்தான். அருகில் அவனையே பார்த்தபடி விஸ்வாவும் ரத்னகுமாரும் அமர்ந்திருந்தனர்
"என்னடா ராஜேந்தர் நடந்துச்சி ?" - விஸ்வா
"எனக்குத் தெரியலைடா, சாயந்தரம் காலேஜ்ல இருந்து வந்து பாத்தா ரூம்ல கானா வாய்ல நொரை தள்ளிப்போய் கீழ விழுந்து கெடந்தான், எனக்கு கை காலெல்லாம் வெடவெடன்னு ஆயிடுச்சி, ஒடனே ஆட்டோல தூக்கிபோட்டு இங்க கொண்டாந்து போட்டுட்டு வாசுக்கு போன் பண்ணி உங்கள கூட்டினு வரச்சொன்னேன்" - ராஜேந்தர்
இதற்குள் கானா கண்களை மெல்லத் திறந்தான். மெதுவாக சுற்றுப்புறத்தை உணர்ந்தவன் "என்னய ஏன்டா காப்பாத்துனீங்க" என்று சொல்ல நினைத்து முடியாமல் போனதால் பலமிழந்து அழ ஆரம்பித்தான். அவனைத் தேற்றிவிட்டு விஸ்வா, கதிர், ரத்னகுமார் மூவரும் ஆஸ்பத்திரியை விட்டு வீடு திரும்பினார்கள்.
மறுநாள் ஆஸ்பத்திரியில் கானா சற்று தெம்பாக இருந்தான். மாலை வீடு திரும்பலாம் என்று டாக்டர் கூறியிருந்தார். அன்று கதிர்,விஸ்வாவுடன் இன்னும் சில கல்லூரி நண்பர்களும் கானாவை வந்து பார்த்துப் பேசிவிட்டு சென்றனர். அனைவரும் சென்ற பிறகு விஸ்வாவும் கதிரும் கானாவிடம் என்ன நடந்தது என்று கேட்டான். சற்று நேரம் உடைந்து அழுத கானா மெதுவாக பேச ஆரம்பித்தான்.
"அன்னிக்கு ரத்னகுமார் சொன்னவுடனே ஒரு வெறியில் நேரா ஹொப் காலேஜான்ட இருக்குற கிஃப்ட் ஷாப்ல ஒரு கார்டு வாங்கி அதுல 'அழகே உன்னை ஆராதிக்கிறேன்'னு எழுதி ஒரு ரோஸ் வச்சி அவகிட்ட நேராப்போய் ஐ லவ் யூ சொன்னன்டா" - கானா
"அவ முடியாதுன்னு சொன்னாளா? அப்பிடி சொன்னா நீ உடனே இப்படி முட்டாள்த்தனமா பண்ணுவியா? போடங்கு!" - விஸ்வா
"அவ என்னை லவ் பண்லேன்னு சொல்லுவான்னு நான் எதிர் பாக்கலைடா. அது கூட பரவால்ல, எல்லார் முன்னாலையும் கூட்டி வச்சி என்னய பட்டிக்காட்டான், லூசு அது இதுன்னு அவமானப்படுத்திட்டா. அதுக்கப்றமும் உயிர் வாழனுமான்னுதான் அப்டி பண்ணிட்டேன்" - கானா
"சரி நடந்தது நடந்துபோச்சி, இனிமேயாவது இப்படியெல்லாம் பண்ணாம ஏதாவது வாழ்க்கையில பெரிசா சாதிக்கப் பாரு" - விஸ்வா
"என்னிய அவமானப்படுத்தினா இல்ல, இந்தப் குப்பத்து கானா எவ்வளவு பெரிய ஆளா வரமுடியும்னு அவளுக்கு செஞ்சி காட்ற வரை நான் ஓயமாட்டன்டா" - கானா
"தட்ஸ் குட்" - விஸ்வா
இந்த களெபரத்தில் சங்கீதாவின் பிறந்தநாளுக்கு கதிர் அவன் காதலைச் சொல்லலாம் என எடுத்திருந்த முடிவை விஸ்வாவும் ரத்னகுமாரும் மறந்தே விட்டார்கள்.
என்ன நடந்தாலும் தன் காதலை அவள் பிறந்தநாளன்று சொல்லிவிடுவதென்று தீர்மாணித்திருந்தான் கதிர், அவளுக்கு பரிசளிக்க ஒப்பனக்காரத் தெருவிலிருக்கும் நகைக்கடை ஒன்றில் ஏழு சிறு வைரக்கற்கள் பதித்த V வடிவிலான தங்க மோதிரமொன்றை வாங்கி வைத்தான்.
மறுநாள் சங்கீதாவிற்கு பிறந்தநாள். இரவு முழுதும் கதிருக்கு தூக்கம் வரவில்லை. நொடிக்கொருதரம் சாட்டின் ரிப்பனால் சுற்றி அழகாகன சிறு பெட்டியில் வைத்திருந்த மோதிரத்தை பார்த்துக்கொண்டிருந்தான்.
கதைத்தது தகடூர் கோபி(Gopi) நேரம் 1:44 PM 1 கருத்து(க்கள்) சொல்லுங்க
சம்பந்தப்பட்டவர்கள் படிக்காத வரை கதைப்பது கோபி
நீங்க சொல்லுங்க
சமீப கால பதிவுகள்
பழைய பதிவுகள்
மொழிமாற்றிகள்
காமராஜ் (ஹிந்தி)சேரன் (மலையாளம்)
தகடூர் (தமிழ்)
கோதாவரி (தெலுங்கு)
காவேரி (கன்னடம்)
கலிங்கா (ஒரியா)
காந்தி (குஜராத்தி)
மஹாகவி (பெங்காலி)
குரு (பஞ்சாபி)
உமர் (பன்மொழி)
இந்த வலைத்தளத்தில் எழுதப்பட்டுள்ளவற்றை முழுவதாகவோ/பகுதிகளாகவோ பயன்படுத்த விரும்பினால் கோபிக்கு மின்னஞ்சல் செய்து ஒப்புதல் பெற்ற பின் பயன்படுத்தவும்